வெள்ளி, 28 மே, 2010


பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்து மறந்து விடுகின்றனர்.

பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக வெளியே காட்டிக் கொள்ளும் இவர் உண்மையில் இதற்கு நேர் எதிரானவர். அபு அப்துல்லாஹ் கூறுவது போல் எதை வேண்டாம் என்கிறாறோ அது வேண்டும் என்று அர்த்தம் பணத்தை வேண்டாம் என்பார் பாக்கெட்டில் வைத்து திணிக்க வேண்டும் என விரும்புவார். எளிமை வேஷம் போடுவார் புதிதாக சந்தைக்கு வரும் அனைத்து எலக்டானிக் கருவிகளும் (குறிப்பாக செல்போன், பேனா, மைக், கேமரா போன்ற புலனாய்வு சாதனங்கள்) இவருக்கு முதலில் கிடைத்துவிடும். எனக்கு ஏசி ரூம் வேண்டாம்மா என்று சொல்லி விட்டு பின்னாள் வரும் நிர்வாகியிடம் நாளைக்கு புரோக்ராம் நல்லா வரனும்னா அண்ணன் நிம்மதியா தூங்கனும் அவர் வேணான்னு தாம்பா சொல்வார் நாம தான் ஏற்பாடு செய்யனும் ! என்று சொல்ல சொல்வார். மேடைக்கு வரும் போது அடக்கமாக பின்னால் சென்று அமர்ந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பார்.

இப்படித்தான் ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பாக்கர் உள்ளிட்ட பல நிர்வாகிகளை கூறுவார். ஆனால் உண்மையில் பார்த்தோம் என்றால் இந்த ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பது இவரும் இவரது குடும்பத்தினரும் தான் ! கொள்கைச் சொந்தமே சொந்தம் குருதி சொந்தம் தேவையில்லை புறக்கணிப்போம் எனக் கூறி குடும்பங்களையெல்லாம் பிரித்த இந்த புண்ணியவான். அதை தன் குடும்ப விஷயத்தில் கடைப்பிடித்தாரா ? என்றால் இல்லவே இல்லை வெள்ளிக்கிழமை கூட தொழுகாத இவரது தம்பி காஜா இவர்தான் உணர்வின் விளம்பர ஏஜென்ஸியான பிடபில்யூபி ஏஜென்ஸியை நடத்துகிறார். இவரது பொறுப்பில் நடக்கும் உணர்வுக்கு திடிரென 5 லட்சம் கொடுங்கள் என கூறுவார் ஜமாஅத் - பணத்திலிருந்து கொடுக்கும் பொருளாளருக்கு கணக்கேதும் கிடைக்காது.

தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி கொடுத்தள்ளார். சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான் ! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான் ! ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்க்கு கறந்து விடுவர். இப்படித்தான் கடந்த முறை பன்னீர் மூலம் ஜெ தந்த பல லட்சம் பணம் ஜெகவீ மூலமாக தேர்தல் பிரசார செலவாக காண்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் குண்டு வைத்தது யார் ? என்ற பிரசுரத்தை 3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்த கொடுமை எல்லாம் பெரிய குளம் சகோதரர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது வெளிப்பட்டது. பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி இவரது மைத்துனர்கள் அப்பட்டமாக காலண்டர் போட்டு சம்பாதிக்கிறார்கள் என நாம் குற்றம் சாட்டிய போதும் பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட கண்டு கொள்ளவில்லை.

இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை ! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளயோ குடும்பக் கொள்ளை ! தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை 300 ரூபாய்க்கு விற்று வருடத்திற்கு 10,000 குர்ஆன் மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்யும் இவர்கள் மற்ற தர்ஜமாக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்யாதது ஏன்? மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகமல்லவா ! மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகமல்லவா.

இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் வேறு ! உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுகின்றனர். ரஹ்மத் டிரஸ்ட் உண்மையில் பெரும் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்து,மொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள் யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா ? சம்பளம் வேண்டாம் ! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ? சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா? 2005ல் இருந்து கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா? ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் நீங்கள் ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா? இதில் மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றீர்கள். கோவை குர்ஆன் அறக்கட்டளை 45,000 குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாத நபர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ஆறே மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 5000 குர்ஆனை மாற்றுமதத்தவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தின் பெரிய ஜமாஅத் என மார்தட்டும் நீங்கள் எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளீர்கள் ? 50,000 குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள். 50,000 குர்ஆனை ரூ.300க்கு விற்று லாபம் சம்பாதிக்கும் இவர்கள் நேர்வழிபெற்றவர்களா? சிந்திக்க வேண்டாமா!

மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். மாநில நிர்வாகிகளுக்கு ! மாதம் ஒன்றுக்கு எடிட்டிங் வகையில் இருந்த குடும்பத்திற்கு 30,000 போய்ச் சேருகிறது. சிடி போட்டு பாக்கர் சம்பாதித்தார் என குற்றம் சாட்டும் ஹாமிம் இப்ராஹிக்கு ரிக்கார்டிங்போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ ? இப்போது புதிய கடையில் வாடிக்கையாளரை கவர தந்தையே கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டுள்ளார். (எதிர் கடைகாரர் இவர் ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என நம்மிடம் கேட்கிறார்.)

ஆக மற்றவர்கள்ளை எல்லாம் “இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிப்போம் ! எனச் சொல்லிவிட்டு இவர் மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையில்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துகிறார். ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங்க ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். கருணாநிதியை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார். அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி, படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்! இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம் ! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா ? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா? ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.

நன்றி - செங்கிஸ்கான்ஆன்லைன்.காம்

செவ்வாய், 25 மே, 2010

ஏக இறைவனின் திருப்பெயாரால்....

தியாகியே! தீவுத்திடல் நோக்கி திரண்டுவா! என்ற தலைப்பில் தமிழக தவ்ஹீதை குத்தகைக்கு எடுத்திருப்பது போல் கூக்குரலிடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவர்களின் மாநாட்டிற்கான அழைப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.



அதில்... இடஒதுக்கீடு சாத்தியமல்ல! என்று விரகத்தியில் இருந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்க்கான வழியை காட்டியவர்கள் தவ்ஹீத் கொள்கையினர்தான் என்று அதில் கூறுகிறார்கள். அப்படி என்றால் இவர்களின் கூற்றுப்படியே இடஒதுக்கீட்டு குரலை முதன் முதலில் ஒழித்து அதற்கான போராட்டகளத்தை ஏற்ப்படுத்திய குணங்குடி ஹனீபா, பேரா.ஜவாஹிருல்லாஹ், பி.ஜைனுல் ஆபிதீன், செ.ஹைதர் அலி, எஸ்.எம்.பாக்கர், அலாவுதீன் போன்றோர் அடங்கிய தமுமுக என்பதையும் இவர்களெல்லாம் உண்மையில் தவ்ஹீத்வாதிகள்தான் என்பதை இவர்களே கூறுகிறார்கள். அல்லாஹ் சில நேரங்களில் சில நபர்கள் வாய்களில் தன்னை அறியாமலேயே உண்மையை உலர வைப்பான் எனபது இவர்களது மாநாட்டு அழைப்பில் தெளிவுபடுகிறது.
(அல்ஹமதுலில்லாஹ்


அதே அழைப்பில் இன்னொரு இடத்தில் சொல்கிறார்கள் 1995 ல் சென்னை கடற்கரையில் கூட்டிய மாநாட்டையும் 2004 ல் தஞ்சைப் பேரணி மாநாட்டையும் நடத்தியது தவ்ஹீத்வாதிகள்தான் என்று ஆணித்தரமாக கூறும் இவர்கள் யாரை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்கிறார்கள் என்பதை மக்களால் தெளிவாக விளங்கமுடியும். ஏனன்றால் அந்த இரண்டு மாநாடுகளையும் தமுமுக தான் நடத்தியது என்பதும் அந்த தமுமுக வில் தான் பேரா.ஜவாஹிருல்லாஹ், செ.ஹைதர் அலி, எஸ்.எம்.பாக்கர் எல்லாம் இருந்தார்கள் என்பதும் மக்கள் அறிந்த உண்மை. இவர்கள் வாயாலேயே தமுமுகவினரை தவ்ஹீத்வாதிகள் என்று வர்ணிக்கிறார்கள் என்றால் பிறகு எப்படி தமுமுகவிலிருந்து இவர்களாக விலகும்பொழுது தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு தமுமுக எதிராக இருக்கிறது என்ற வாதத்தை வைத்தார்கள். என்ற கேள்வி சமுதாய மக்களால் இன்று எழுப்பப்படுகிறது. இதன்மூலம் இவர்கள் வடிகட்டிய பொய்யர்கள் எனபது தெளிவாகிறது.



உண்மையான முஸ்லிம்கள் யாரும் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான் என்று பிரச்சாரம் செய்த இந்த போலி தவ்ஹீத்வாதிகள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அந்த பார்பன ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் அம்மா இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்துவிட்டார். ஆகவே அம்மாவிற்குதான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் நடிகைகளோடு (நம் சகோதர்களோடு ஒரே மேடையில் ஏறாதவர்) பிரச்சாரகளம் கண்டார்கள். ஆனால் சமுதாய இயக்கமான தமுமுக சரியான பாதையை தேர்ந்தெடுத்து நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அழைத்து தனது இல்லத்தில் விருந்து வழங்கிய ஜெயலலிதாவை எதிர்த்து மாறாக இரண்டே கோரிக்கைக்காக தி.மு.க வை ஆதரித்து தமிழக முழுவதும் பிரச்சாரம் மேர்க்கொண்டு திமுக விற்கு வெற்றி வாய்ப்பை ஏற்ப்படுத்திகொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களோடு இருந்து சாதுரியமாகவும், வீரியமாகவும் இடஒதுக்கீட்டுக்கான குரல் எழுப்பி வந்ததோடு மட்டுமல்லாமல் திமுகவிற்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்தது. அதன் நெருக்கடி காரணமாக இனி முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை விளங்கிய கருணாநிதி இடஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் அமுல்ப்படுத்திய வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்துகொண்டு இந்த போலி தவ்ஹீத் கூட்டம் எங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்ற பொய்யை திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள்.



குஜராத்தில் உன் சமுதாயத்தை சார்ந்தவர்கள் 3000 பேர் கொளுத்தப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒரு முனுமுனுப்பு கூட இல்லாமல் பிசு பிசுத்து போனது ஏன்? என்று இன்று கேட்கும் இவர்கள் அந்த கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடி மீண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அழைப்பே இல்லாமல் நேரடியாக சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து விட்டு வந்ததோடு மட்டுமில்லாமல் தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வழங்கிய ஜெயலலிதாவை இவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தது ஏன்? அதன்மூலம் இவர்கள் அடைந்த ஆதாயம் என்ன? என்ற கேள்வியை சமுதாய மக்கள் எழுப்புகிறார்கள். அதற்கு இந்த போலி தவ்ஹீத்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? எந்த மாயாஜால வார்த்தையை கூறி சமுதாயத்தை நம்பவைக்கும் நாடகத்தை அரங்கேற்ற போகிறார்கள்?



வெளிநாட்டில் குறிப்பாக அரபு நாட்டில் ஆடு மேய்ப்பது, பாலைவன வெயிலில் சாலை போடுவது, அரபி வீட்டில் அடுப்படி நெருப்பில் சமைப்பது, அவன் வீட்டு குழந்தைகளுக்கு மலம் கழுவுவதுதான் காலமெல்லாம் உன் கதியானது . இதுவே உன் வாழ்கை விதியானது. நீ அரபு நாட்டு அடிமை. இந்த அவல நிலையை போக்கவேண்டுமென்றால் மத்தியில் நமக்கு 10% இடஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லும் இவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக சமுதாய மக்களோடு டெல்லி சென்று ஆட்சியின் அதிகார பீடமான நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மாநாட்டையும் நடத்தி அதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் பங்கு பெறவைத்து அதன் இறுதியில் பிரதமரை சந்தித்து 10% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஒரு மனுவையும் கொடுத்துவிட்டு வந்த அந்த தமுமுக வின் போராட்டத்தை இந்த போலி தவ்ஹீத்வாதிகள் விமர்சித்தது ஏன்? இந்த அரபு நாட்டு அவலங்கள் அன்று இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? அல்லது அன்று இவர்களின் கண்ணை மறைத்தது எது? என்று சமுதாய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த போலி தவ்ஹீத்வாதிகளின் பதில் என்ன?



ஜெயலலிதா கடந்த 5 வருட ஆட்சியில் இருந்தபொழுது தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு இடஒதுக்கீடு வழங்காமல் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி வந்ததோடு ஆந்தராவில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அந்த ஜெயலலிதாதான் மீண்டும் இந்த சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஆணையம் அமைப்பதற்காக அல்லது அமைத்ததாக நாடகமாடியதை எந்த மடையனாவது நம்புவான? ஆனால் இந்த மாங்கா மடையர்கள் நம்பி முஸ்லிம் சமுதாயத்தின் துரோகி ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன்?



கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் பல்வேறு நெருக்கடிக்குப்பிறகு இடஒதுக்கீடு வழங்கியது. அந்த திமுக அரசையே விமர்சித்து இவர்கள் (திமுக) நம் சமுதாயத்தை ஏமாற்றி விட்டார்கள் என்று சமுதாய மக்கள் மத்தியில் கூறி வந்த இவர்கள் திமுக கூட்டணியில் இருந்த தமுமுக வெளியேற்றப்பட்டவுடன் தானாகவே வழிய சென்று கருணாநிதியை சந்தித்துவிட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வை ஆதரித்தது ஏன்? இவர்களின் அரசியல் லாபம் என்ன? என்று சமுதாய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? இந்த போலி தவ்ஹீத்வாதிகளின் பதில் என்ன?


நாம் இவர்களை பார்த்து கேட்பது....?

1) 1995 ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் பங்குபெற்ற ஜெயலலிதாவோடு மேடை ஏறமாட்டேன் என்று சொன்ன பி ஜே பிறகு 2006 ல் அதே ஜெயலலிதாவை ஒரு ரூமில் சந்தித்தது ஏன்?



2) எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான் என்று சொல்லிய பிஜே கடந்த சட்டமன்ற தேர்தலில் (நரேந்திர மோடியின் தோழி) ஜெயலலிதாவிற்குதான் முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறியது ஏன்?



3) கோவையில் 19 முஸ்லிம்களை கொன்ற கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு என்று சொல்லிய பி.ஜே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதிக்குதான் நாம் வாக்களிக்கவேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தது ஏன்?



4) 1995 லிருந்து 2004 வரை தமுமுகவினரை நம்பி இந்த சமுதாயம் எவ்வளவு பொருளாதாரம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் காரணம் இவர்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வை அஞ்சிய தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிவிட்டு 2004 க்கு பிறகு இவர்கள் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செயது தமுமுகவை முடக்க நினைத்துவிட்டு இன்று வாழ்வுரிமை மாநாட்டையும், தஞ்சை பேரணி மாநாட்டையும் நடத்தியது தவ்ஹீதுவாதிகள்தான் என்று அதே தமுமுகவினரை கூறுவது ஏன்?



5) அந்த மாநாடுகளை நடத்தியது தவ்ஹீத்வாதிகள்தான் என்றால் அந்த இரண்டு மாநாட்டையும் நடத்தியது இன்று உள்ளவர்களையும் உள்ளடக்கிய தமுமுகவினர்தானே?



6) தமுமுகவிலிருந்து பிரியும் பொழுது தமுமுக அரசியலுக்கு போகிறது என்று சொல்லிவிட்டு தனி இயக்கம் கண்ட இவர்கள் பிறகு தங்களது இயக்கத்தை வழிநடத்துவதற்காக அரசியல் செய்தது ஏன்? சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மாநாட்டை நடத்தி அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாங்களும் இயக்கம் நடத்துகிறோம் என்பதை காட்டுவது ஏன்? சமுதாயத்தின் கோரிக்கையை முன்வைத்துதான் மாநாடு நடத்துகிறோம் என்றால் அதே கோரிக்கையை சகோதர இயக்கங்கள் வலியுறுத்தும்போது அவர்களை உதாசினப்படுத்தி, கேவலப்படுத்தி விமர்சிப்பது ஏன்? (இப்பொழுது இவர்கள் கேட்கலாம் நங்கள் நடத்தும்போது ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று, நாம் இவர்களை தவறாக விமர்சிக்கவில்லை, இவர்கள் மீது இட்டுக்கட்டவும் இல்லை மாறாக இவர்கள் கடந்த காலங்களில் செய்தவற்றயே கேள்வியாக கேட்க்கிறோம் சரியான பதில் கொடுத்தல் சமுதாயம் விளங்கிக்கொள்ளும்)



7) இன்று சகோ.பாக்கரின் குறைகளை (அவர் குற்றம் செய்தாரா என்பதை அல்லாஹ்வே நன்கு அறிவான்) தீவிரமாக எதிர்க்கும் பி ஜே மற்றும் அவரது கூட்டம் சகோ.பாக்கர் இவர்களோடு இருக்கும் பொழுது இவரது குறைகளை (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்( மறைத்து தங்களது இயக்கத்தையும், தங்களையும் வளர்த்துக்கொள்ள சகோ.பாக்கரை காரணியாக பயன்படுத்தியது ஏன்? இவர்கள் கூட சகோ.பாக்கர் இருக்குபோது அவரின் குறைகள் (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்) இவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தார்களா? இவர்களுக்கு தேவைபடும் வரை சகோ.பாக்கரின் குறைகளை (இவர்கள் பார்வையில் குற்றம் செய்தவர்) மறைத்துவிட்டு அடுத்த ஒரு சகோதரர் நோண்டும் பொழுது எங்கோ நமது குற்றுகளும் வெளிப்பட்டு நாரிவிடுவோமோ என்று நினைத்து கொண்டு வேக வேகமாக செயற்குழுவை கூட்டி சகோ.பாக்கரை தூக்கி எரிந்தது ஏன்?



இதே போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம் கண் முன்னே நிற்கின்றன. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். இது போன்ற செயல்பாடுகள்தான் தன்னை தவ்ஹீத்வாதி என்று நிர்மாணிக்கும் என்றால் உண்மையில் இவர்கள் மட்டும்தான் தவ்ஹீத்வாதிகள் எனபது வெட்ட வெளிச்சமாகிறது. இன்னும் இவர்களுக்குள் என்னதான் நடக்கபோகிறது(இறைவன் நாடினால்) என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி என்ற தவ்ஹீதின் உண்மைநிலையை தெளிவுபடுத்துவானாக! இந்த சகோதரர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.



-- பொறுமையுடையான் --

வியாழன், 20 மே, 2010

தான் ஓரு அப்பட்டமான பொய்யன் என்பதை பிஜே மீண்டும் நிருபித்து இருக்கிறார்.

நீங்கள் யார் என்ன சொன்னாலும் நான் பிஜெ இல்லை பொய்ஜெதான் என நீக்கமற நிரூபிக்கும் தனிநபர் தக்லீத் ஜமாஅத்தின் நிரந்தர தலைவர் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார்.


நெல்லையில் நடந்த யாதவ மகா சபையின் மாநாட்டில் நடந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொண்டதாக பொய்யான செய்தியை பொய்யன்ஜெயின் கட்டுபாட்டில் இயங்கும் டிரஸ்டுக்குச் சொந்தமான வார இதழ் (14:35) வெளியிட்டிருந்தது. இதற்காக எஸ்.எம். பாக்கர் தனது வழக்கறிஞர் மூலம் டிரஸ்டு வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில், தவறான செய்தி வெளியிட்டதற்காக டிரஸ்டு இதழ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அதனை 7 நாட்களுக்குள் அதே இதழில் பிரசுரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் வக்கில் நோட்டீசில் இல்லாத வாசகத்தை பொய்யாகச் சேர்த்து வெளியிட்டுள்ளது (மே 14-20 தேதியிட்ட) டிரஸ்டு இதழ் அந்த வார இதழ் வெளியிட்டுள்ள (திரிக்கப்பட்ட) வாசகம் பின்வருமாறு:


"மேலும் தனது மறுப்பில் அவர் நான் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சிலையைத் திறந்த பின் அது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலையைத் திறப்பது போல் பத்திரிகைகளுக்காக போஸ்தான் கொடுத்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நாம் வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு டிரஸ்ட் பத்திரிக்கைக்கு அனுப்பிய (உண்மையான) வாசகம் பின்வருமாறு:
"மேற்கண்ட சிலை திறப்பு நிகழ்ச்சி மாலை சுமார் 5.30 மணியளவில் நடைபெற்றது. ஆனால் எனது கட்சிக்காரர் மாலை சுமார் 6.30 மணிக்குத் தான் மாநாட்டு மேடைக்குச் சென்றார். அவ்வேளையில் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது எனது கட்சிக்காரர் உட்பட தலைவர்கள் அனைவரும் மீடியாவுக்கு போஸ் கொடுத்தனர்''.
உண்மை இவ்வாறிருக்க, வக்கீல் நோட்டீசில் குறிப்பிடப்படாத "சிலையைத் திறப்பது போல் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தேன்'' என்ற வாசகத்தை பொய்யாகச் சேர்த்து வெளியிட்டி ருக்கிறது அந்த வார இதழ். டிரஸ்டு வார இதழின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக வழக்குத் தொடுக்க பரிசீலனை செய்து வருகிறார் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பொய்யர்கள் மீது நாசத்தை ஏற்படுத்த அல்லாஹ்வே போதுமானவன்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்ஆன்லைன்.காம்

புதன், 19 மே, 2010


உங்கள் நோக்கம் நல்ல நோக்கம்.......

கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும்.

தமு.மு.கவின் மாநில நிர்வாகிகள் மற்றும் பீ.ஜெய்னுல்ஆப்தீன், எஸ்.எம்.பாக்கர், ஏ. எஸ். அலாவுதீன் மற்றும் இதர சகோதரர்களுக்கு.. ... சைத்தானுடைய சூழ்ச்சிக்கு விலை போன அ(கே)வலத்தை பார்த்து மனம் வெதும்புகிறோம்... என்று மனம் வருந்தி நீங்கள் எழுதிய ஈமெயில் கிடைத்தது. hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டிலும் பார்த்தேன். உங்கள் நிலையில் இருந்து நீங்கள் எழுதியது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது நடக்காத காரியம் என்பது எனது நிலையாகும். உங்கள் நோக்கம் நல்ல நோக்கம். ஒற்றுமைக்கு உங்கள் மனதில் பட்ட வழியை ஆலோசனையாக எழுதி இருந்தீர்கள். எனவே உங்களுடைய நல் எண்ணத்திற்கு மதிப்பளித்தும், இப்படிப்பட்ட சமுதாய உணர்வு உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிறர் அறியச் செய்ய என்னிடம் உள்ள ஐ.டி.களுக்கு பார்வேடு பண்ணினேன்.

சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை.

பாவிகளா உங்களை சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை. என்ற வார்த்தை சமுதாய நிலையைக் கண்டு உங்கள் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடு என்று விளங்கினேன். சுடுபவன் சொல்லி விட்டு சுட மாட்டான். நேரடி பொருளில் விளங்கி இருந்தால் மற்றவர்களுக்கு நான் பார்வேடு பண்ணி இருக்க மாட்டேன்.

விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம்.

சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை நேரடி பொருளில் விளங்கக் கூடாது. அது ஆதங்கத்தின் வெளிப்பாடு என்று பதில் அளித்த நீங்கள், விளங்குவதற்காக நெருப்பு என்று சொல்வதால் சுடப்போவதும் இல்லை. மிளகாய் என்று சொல்வதால் நாக்கு உறைக்கப்போவதும் இல்லை. என்று உதாரணங்கள் கூறி விளக்கி இருந்தீர்கள்.

விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம் அவசியம் என்று உணர்ந்துள்ள நீங்கள் அனுப்பிய விளக்க மெயிலில், துபையிலிருந்து சகோதரர் பழ்லுல் இலாஹி செய்வதை போலவா செய்ய சொல்கிறீர்கள். இவருடைய பல பிரசுரங்களை படிக்க முடியாவிட்டாலும் சிலவற்றை படித்தேன். அவ்வாறு படித்ததில் த.மு.மு.க வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற பிரசுரமும் ஒன்று. அதில் அவர் ஒரு இடத்தில் நல்ல கருத்தை சொல்லியுள்ளார் அது, இரண்டு பேர்களுக்கு மத்தியில் சண்டை நடந்தால் மனித இதயம் உள்ள 3 வது ஆள் சமாதானம் செய்து வைக்கத்தான் முயற்சி செய்வார்கள். இவரிடம் தவறு குறைவு அவரிடம் கூடுதல் என்று கூறி இரு அணிகளாக ஆக்க மாட்டார்கள்........ என்று எழுதியுள்ளார். ஆனால் அவர் என்ன செய்து கொண்டு உள்ளார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். என்று எழுதி இருந்தீர்கள். அதற்குரிய விளக்கம் - நேரடி பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதை எழுதுவதற்கு முன் விளக்குவதற்காக ஒரு உதாரணம்.

தலாக் வழக்குகளில் கூறிய 2 விதமான தீர்ப்புகள்

50 வயது பெரியவரும் 20 வயது இளைஞரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு 25 வயதுக்கு உட்பட்ட கணவன் மனைவி வழக்கு வருகிறது. ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். இனி சேர்ந்து வாழ முடியாது தலாக்தான் சரியான முடிவு என்று 2 பேருமே கூறுகிறார்கள். அப்பொழுது 50 வயதுக்காரர் உங்கள் கணவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் தெரியுமா? உங்களது குணத்தை எவ்வளவ உயர்வாக புகழ்ந்தார். உங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளார் என்று பொய்யான வார்த்தைகள் கூறி ஒற்றுமையாக வாழச் சொல்கிறார். அதே மாதிரி மனைவியைப் பற்றி அந்தக் கணவர் இடம் உயர்வாகக் கூறி சேர்ந்து வாழச் சொல்கிறார்.

அதே இளைஞருடன் இன்னொரு நாள் அந்த பெரியவர் இருக்கும் போது இன்னொரு கணவன் மனைவி வழக்கு வருகிறது. வந்த கணவர், 'எதற்கெடுத்தாலும் எப்பப் பார்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஷபோய்விடுவேன், போய்விடுவென்' என்று சொல்லி வேதனை செய்து கொண்டிருந்த என் மனைவி போய் விட்டாள். நானாக தலாக் விட்ட மாதிரி எழுதி என்னிடம் கையெழுத்து வாங்கி போய்விட்டாள்' என்கிறார். அதற்கு அந்த முதியவர் உன்னை பிடித்திருந்த சனியன் தொலைந்து விட்டது என்று நிம்மதியாக இரு என்று சொல்லி விடுகிறார்.

அருகில் இருந்த இளைஞர் கடுங் கோபம் அடைந்து, நீங்கள் நீதியான நல்ல மனிதர் என்று எண்ணினேன். முன்பு வந்த கணவன் மனைவி இடம் சேர்ந்து வாழ வலியுறுத்தினீர்கள். ஒற்றுமை பற்றி மணிக் கணக்கில் பேசினீர்கள். இப்பொhழுது என்ன செய்தீர்கள்? வந்தவரிடம் என்ன சொன்னீர்கள்? ஒற்றுமைக்கு முயற்சி செய்யாமல் அதற்கு முரணாக நடந்து கொண்டீர்களே! இது என்ன நியாயம் என்றார்.

அதற்கு அந்த முதியவர் சொன்னார் முதலில் வந்தவர்கள் இளம் தம்பதியினர். 2 பேருக்கும் மத்தியில் இதுதான் முதல் தகராறு. 2 வது வந்தாரே அவருக்கு அவள் முதல் மனைவி. அவளுக்கோ அவர் 10 வது கணவர். ஒவ்வொரு கணவனிடமிருந்தும் ஓரிரு குழந்தை பெற்றதும் தானாக பிரிந்து விடுவாள். வேறு ஒருவரை திருமணம் செய்து விட்டு முந்தைய கணவனை ஆண்மையற்றவன் என்று விமர்சித்து அசிங்கப்படுத்தி விடுவாள் அந்த ஈவு இறக்கமற்ற அரக்கக் குணமுடைய சுயநலக்காரி. புதிய கணவனை வரம்பு மீறி புகழ்வாள். இதை 20 வருடமாக பார்த்து வருகிறேன்.

இது வரை எந்த கணவனும் பெரிய மஹர் வைக்கவில்லை. தலாக்கை கணவனிடமிருந்து பெறாமல் தானாக பிரிந்து விடுவாள். கடைசி கணவர் பெரிய சொத்தை மஹராக வைத்துள்ததால், தானாக போனால் மஹர் சொத்து கிடைக்காது என்பதால் கணவன் தலாக் விட்ட மாதிரி எழுதி வாங்கிவிட்டு போய் விட்டாள் அந்த சண்டாளப் பாவி என்று விளக்கம் கூறினார்.

அது மாதிரிதான் காலித், சிபகத் விஷயத்தில் நான் எடுத்த ஒற்றுமை முயற்சி முதலில் வந்த தம்பதிகள் மாதிரி. பி.ஜே. விஷயம் இருக்கே 2 வது வந்த வழக்கு மாதிரி.

கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி

1986 ஏப்ரலில் இருந்து சரியாக ஓராண்டு காலம் அந்நஜாத் மூலம் தவ்ஹீது எழுச்சி வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத பரபரப்பு. ஆறு குளம் பாபர்ஷhப் என எங்கு பார்த்தாலும் அரசியல் பேசி வந்தவர்கள் ஹதீஸ் ஆயத்கள் பற்றி பேசினார்கள். அந்த ஹதீஸில் வரும் ராவி பலஹீனமானவராம் என்று அரபி கல்லூரிகளுக்குச் செல்லாதவர்களெல்லாம் பேசிய காட்சி, கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி.

அறிஞர் அபு அப்துல்லாஹ்

இந்த எழுச்சியின் போது அபு அப்துல்லாஹ் அவர்களை அறிஞர் என்று பாராட்டிய பி.ஜே. கொள்கை எழுச்சியைப் பற்றி கவலைப் படாமல் அந்நஜாத்தை விட்டு வெளியேறினார். அப்பொழுது ஏற்பட்டிருந்த எழுச்சி அப்படியே அமுங்கியது. அபு அப்துல்லாஹ்வுடன் ஒரு கூட்டம் இருக்க இவர் பின்னால் ஒரு கூட்டம் பிரிந்து வந்தது.

வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும்

சுட்டுக்கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை எப்படி உங்களின் ஆதங்கமாக எடுத்துக் கொண்டோமோ அது போலவே, எனது விமர்சனங்களில் வரும் வார்த்தைகளை ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். என்ற நிபந்தனை வைத்து விட்டு, ஆங்காங்கு எமது ஆதங்கத்தில் வெளிவரும் கடுமையான வார்த்தைகளை எழுத முடியும். ஆனால் எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும். சரியான தீர்வு ஏற்படும் இன்ஷh அல்லாஹ்.

நபி வழியில் நம் ஜக்காத் நூலை எழுதியவர்

1987ல் இப்படி இரண்டு கூறுகளாக்கியவர் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸி கிளையை மதுரையில் துவங்கி புரட்சி மின்னல் பத்திரிக்கையில் எழுதி வந்தார். நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் ஜக்காத் ஆகிய சிறு நூல்களை எழுதிய பி.ஜே. இக்பால் மதனியை உயர்வு படுத்த அவர் எழுதியது போல் வெயிட்டார்.

இக்பால் மதனியின் ஐ.ஏ.ஸி.

1987ல் இக்பால் மதனி, அப்போதைய ஐ.ஏ.ஸி. தலைவர் கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார், மற்றும் துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் பி.ஜே.யுடன் போனில் பேசி ரிக்கார்டு செய்து பொது மக்களுக்கு போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்நஜாத்திலிருந்து பிரிந்த அந்த புண் ஆறி வரும்பொழுது 1988ல் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸியை குறை கூறி ஒரு கடிதத்துடன் உறவை முறித்து பிரிந்தார்.

அந்த கடிதத்தை கண்ட துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் இடிந்து போனார்கள். மனம் உடைந்து போய் இருந்த அவர்களின் அன்றைய நிலை இன்றும் கண்களில் நிற்கிறது. இதன் மூலம் ஒரு சிறு கூட்டத்தை கூறு போட்டு இக்பால் மதனியுடன் போக வைத்தார். பெருங் கூட்டத்துடன் ஐ.ஏ.ஸியில் இருந்து பிரிந்து வந்தார் அண்ணன் பி.ஜே.

கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர்

ஜாக்தான் இஸ்லாத்தின் அடிப்படையிலான முழுமையான அமைப்பு. கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர் என்று புகழ்ந்தார். இவரது நடவடிக்ககைகளால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை மறந்து ஜமாஅத் மீண்டும் எழுச்சி பெற்று நல்ல வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்தும் வெளியேறினார். இங்கேயும் ஜமாஅத்தை 2 கூறுகளாக்கி ஒரு கூட்டத்தை கமாலுத்தீன் மதனி பின்னால் இருக்க வைத்து விட்டு தன் பின்னால் ஒரு கூட்டத்தை பிரித்து வந்தார்.

மாவீரன் கோவை பாஷா

கோவை பாஷhவை ஆதரிப்பதாக கூறி கமாலுத்தீன் கோழை, கோவை பாஷh மாவீரன் என்றார். அதுவரை கோவை பாஷh என்று அழைக்கப்பட்டு வந்தவரை பாய் என்று மட்டும் சொல்ல வைத்து கவுரவபடுத்தினார். இந்த நிலையில் குணங்குடி ஹனீபா அவர்களின் த.மு.மு.க.வில் சேர்ந்த அண்ணன் பி.ஜே. தவ்ஹீதுவாதிகள் த.மு.மு.க.வில் சேர வேண்டியதன் அவசியத்தை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கினார், த.மு.மு.க. வளர்ந்தது. அதன் மூலம் சன் டி.வி.யில் பேட்டி அளிக்க கிடைத்த வாய்ப்பை பாய்க்கு அளித்து அவரை உயர்வு படுத்தினார்.

கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை

"இப்படி யாரை புகழ்ந்து தூக்கி விட்டாரோ அவரை கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே இவரது அகராதி" என்று அடிக்கடி லுஹா கூறுவார். அது போலவே கோவை பாஷhவை தூக்கிய வேகத்தில் தூக்கி வீசினார். கோவை பாஷh பின்னால் அல் உம்மா என்று இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல வைத்தார் அண்ணன் பி.ஜே.

அமைப்புகளின் தலைவர் ஹாமித்பக்ரி.

ஹாமித்பக்ரியை தலைவராகக் கொண்டு தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம் இப்படி பல அமைப்புகள் துவங்கினார். தான் விரும்பியவர்களையே மக்கள் தலைவராக ஏற்க வேண்டும் என்பதே அண்ணன் பி.ஜே. அவர்களின் நிலைப்பாடு. கூட்டமைப்பு துவக்க நிகழ்ச்சியில் கூடி இருந்தவர்களில் பெரும்பாலனவர்களின் பேராதரவால் ஹாமித்பக்ரி தலைவரானார். தன்னைத் தவிர யாரும் மக்கள் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத பி.ஜே. சந்தர்ப்பம் பார்த்து அவரை தலைமை பொறுப்பில் இருந்து கழட்டி விட்டார்.

முன்னதாக இமாம் அலி சகோதரியை திருமணம் செய்யச் செய்தார். இதை ஒட்டிய எல்லா விபரமும் ஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம், ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி. ஆகிய தலைப்புகளில் வெளியான பிரசுரங்களில் உள்ளது. ஹாமித்பக்ரி கைதை காரணமாக்கி அவர் முழுமையாக கழட்டி விட்டார். அவர் பின்னால் ஒரு கூட்டமும் தாஇகளில் பெரும்பாலானவர்களும் செல்ல 2 கூறுகள் ஆகச் செய்தார் அண்ணன் பி.ஜே.

ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம்.

ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம் இப்படி ஒவ்வொருவருடனும் சிறு சிறு கூறுகளை போட்டு ஜமாஅத்களை பிரித்து பலஹீனப்படுத்தி வந்தார் அண்ணன் பி.ஜே. புரட்சி மின்னல் அப்துல்லாஹ், ரஹ்மதுல்லா இம்தாதி, முஹ்யித்தீன் உலவி, கோவை ஐயூப், முஸ்தபா கமால், சீனி நைனா முஹம்மது என்று பட்டியல் நீளுகிறது.

அதிலாவது உருப்படியாக இருந்தாரா?

தவ்ஹீது அமைப்புகளில்தான் இப்படி கொள்கை கோட்பாடுகள் பெயரால் கூறு போட்டார். கொள்கை வேறுபாடுகளையும் மனிதர்களிடம் உள்ள குறைகளையும் மறந்து முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்று சமுதாயம் த.மு.மு.க.வில் ஒன்றுபட்டது. அதிலாவது உருப்படியாக இருந்தாரா?

சமுதாயத்திற்குத் தெரிந்த இரு நிகழ்ச்சிகள்.

1997 திருச்சி பொதுக்குழுவில் மக்களிடம் கோபித்துக் கொண்டு அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தையும் விட்டு ராஜினாமா செய்தார். அப்பொழுதும் சமுதாய எழுச்சியில் வீழ்ச்சி எற்பட்டது. அடுத்து மனம் திறந்த மடல் எழுதி ஒரு சோர்வை எற்படுத்தினார். பகிரங்கமான இந்த இரு நிகழ்ச்சிகள்தான் சமுதாயத்திற்குத் தெரியும்.

உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?

உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அது அரிவாளால் வெட்டப்பட்ட மிகப் பெரிய காயமாக இருந்தாலும் வெட்டுப்பட்ட அந்த புண்ணுக்கு தையல்கள் போட்டு மருந்து கொடுத்து சரிபடுத்திவிட முடியும். மிக மிகச் சிரிய புண்ணாக இருந்து அது அழுகி விட்டால் அதை வெட்டி தூரே வீசி விட்டு மருந்து போட்டால்தான் உடல் குணமாகும். அழுகிய நிலையில் உள்ள அந்த பகுதி நம் உடலில் ஒரு பாகம் ஆயிற்றே என்று அப்புறப்படுத்த தயங்கினால் உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?

சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்

உடலில் எந்த ஒரு பாகத்திலும் எவ்வளவு பெரிய பாதிப்பு எற்பட்டாலும் மூலை அதை மேனேஜ் பண்ணிக் கொள்ளும். உடல் முழுவதும் நன்றாக இருந்து மூலைக்கு சிறு ஒரி என்றாலும் உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும். சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்.

ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன் விலகிவிடுவேன் என்று சொன்னது பகிரங்கமாகிவிட்ட இந்த ஒரு முறைதான் என்று சமுதாயம் எண்ணுகிறது. இது முதல் முறை அல்ல சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இப்படி கூறி விடுவதும். தன்னுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று வீட்டில் உள்ள போனை கீழே எடுத்து வைத்து விடுவதும், பிறகு தலைமையில் உள்ள ஒவ்வொருவரும் போய் கெஞ்சிக் கூத்தாடி சரி கட்டி கொண்டு வருவதுமான நிகழ்ச்சிகள் ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல.

சேனல், போலீஸ் ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல்

இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கு வீட்டுக் கதவை மூடி விட்டு இருப்பதும் திறப்பதுமான நிகழ்ச்சிகளைத்தான் தவ்பா வாசல் மூடி இருக்கிறது. தவ்பா வாசல் திறந்தாச்சு என்று கூட்டுடைப்பு மவுலவிகள் சொல்வார்கள். இதைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6-4-02ல் பி.ஜேக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த பி.ஜே.யின் சேனல், போலீஷ; ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல் ஆகிய வார்த்தைகள். அந்த வார்த்தைகள் அன்று பலருக்குப் புரியாமல் இருக்கலாம். சேனல் என்றால் என்ன என்பதற்கு ஒரு வகை விளக்கத்தை சமீபத்தில் வெளியான 2 சி.டி.களிலும் பி.ஜே. கூறி உள்ளார். போலீஸ் ஸ்டேஷன் தன்மை என்ற வார்த்தை சமீபத்தில் வெளியாகி உள்ள சி.டி.களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் அது விளக்கப்படவில்லை. வரும் சி.டி.களில் விளக்கம் கிடைக்கலாம்.

பீஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட தொண்டர்களை திரும்ப பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி விடுவேன் என்று கூறி இருக்கிறார். இதை முதல் சி.டி.யில் அண்ணன் பி.ஜே. அவர்களே ரிசைன் பண்ணி விடுவேன் என்று சொன்னதாக ஒப்புக் கொண்டு பேசி உள்ளார். திருச்சியில் பேசும்போது இந்த உண்மையை ஒப்புக் கொள்வது தனக்கு பாதமானது என்று உணர்ந்த அண்ணன் பி.ஜே. சுதாரித்துக்கொண்டார். எனவே அதை அவருடைய ஹிக்மத்படி ஷஷவெளியில் போய்தான் சொல்ல வேண்டி வரும் என்று சொன்னதாக கூறி மக்கள் கவனத்தை திசை திருப்பி சமாளித்து உள்ளார்.

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா

சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இது மாதிரி நடந்து கொண்டு யாரும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் அவரது வீட்டு போனை கீழே எடுத்து வைத்து விடும்போதெல்லாம் அவருக்கு தேவையான போன் என்றால் முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவிடம் சொல்லி வைப்பார்.

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவுக்கு போன் வரும் அவர் மாடியில் உள்ள ஆபீஸில் இருந்து கீழே இறங்கி வந்து, இவர் இருக்கும் மாடிக்கு ஏறிச் செல்வார். அதே தெருவிலோ அடுத்தடுத்த தெருவிலோ எங்கு இருக்கிரோரோ அங்குபோய் சொல்வார். அப்படி அவருக்கு பணி செய்த அந்த ஜக்கரிய்யா அவர்களைத்தான் இன்று புத்தக வியாபாரி என்று கூறி உள்ளார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா

முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா என்றுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பி.ஜே. ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி என்று கூறியதிலும் உண்மை இருக்கிறது. பி.ஜே. எழுதிய புத்தகங்களை வெளியிட்டு அதன் மூலம் ராயல்டி கொடுத்தவர் அல்லவா ஜகரிய்யா. அவரிடம் ராயல்டி பெற்ற பி.ஜே.க்கு ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி ஜக்கரிய்யா என்றுதான் தெரியும்.

வாழ்வுரிமை மாநாட்டு மகிழ்ச்சியை அப்பொழுதே தொலைத்தவர்கள்

வாழ்வுரிமை மாநாடு மகிழ்ச்சியில் இருந்து இன்று வரை மீளாதவர்கள் உண்டு. த.மு.மு.க. தலைமையினர் அந்த மகிழ்ச்சியை அப்போதே தொலைத்து விட்டனர் என்பது சமுதாயத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? மார்ச் பேரணி மகிழ்ச்சியை ஒட்டு மொத்தமாக எல்லாரும் தொலைத்து விட என்ன காரணமோ அதேதான் அன்று நடந்தது. அந்த வேதனையை தலைமையினர் மட்டும் அனுபவித்தனர். இதையெல்லாம் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்களே அவர்களின் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா.

தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?

குடும்பத்தில் மூத்த மருமகள்தான், கொழுந்தனுக்கு கல்யாணம் நடந்தாலும் கொழுத்தியாவுக்கு கல்யாணம் நடந்தாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகச்சியின் போதும் நான் தலாக்காகி போய் விடுவேன்;. இது எனக்கு பிடிக்கவில்லை நிறுத்தாவிட்டால் தெருவில் நின்று சப்தம் போடுவேன், இல்லை தலாக்காகி போய் விடுவேன் என்று சொன்னால், அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கலாம் புரியாமல் இருக்கலாம். குடும்ப தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?

இதையெல்லாம் தெரிந்த ஒருவர் தானாக தலாக்காகி போய் விட்ட அவளை கூப்பிடுங்கள். குடும்பத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல முடியுமா? சொன்னால் அவரை அறிவு உள்ளவராக மனித உள்ளம் உள்ளவராக உண்மையை அறிந்தவர்கள் ஏற்பார்களா?

வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,துபை

தாயக முகவரி:

22ஏ.சமாயினா

Nஷக் முஹம்மது மூப்பன் தெரு

மேலப்பாளையம். 627005

முத்துப் பேட்டை ஏ.ஆர் பரகத் அலி அவர்களின் கடிதங்களையும் எமது கடிதங்களையும் மற்றுமுள்ளவர்களின் விமர்சனங்களையும் http://www.pjvstmmk.com என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.

செவ்வாய், 18 மே, 2010


சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் (பிஜே) !

சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்றுதான் எழுதியுள்ளேன். சிறை கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் என்று சிறையில் பீடி வாங்கி கொடுத்தவர்களோ,முன்பு அவருடன் நெருக்கமாக இருந்தவர்களோ இப்படி படித்தால் நான் பொறுப்பு இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன்.

அநியாயமாக சிறையில் தள்ளப்பட்டதும் நியாயமாக சிறையில் தள்ளப்பட வேண்டியபி.ஜெ.யைக் காட்டிக் கொடுக்காதவர்களில் தடாவில் தள்ளப்பட்ட பாக்கரும் ஒருவர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ள மாவீரன் பி.ஜெ. பூட்டு உடைப்பு போராட்டத்தில் 800பேருடன் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறை சென்று பொறுமையுடன் இருந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள்.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. அதுவும் முதல் நாள் நடந்த பேரணியில் கூட்டத்தை கண்டு விட்டு உட்சாக அறிவாளியாக வாய் குளறி பூட்டு உடைப்பு போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என அறிவித்து விட்டார் மாவீரன் பி.ஜெ. இந்த மாவீரனைப் பற்றி அப்பொழுதே தெரிந்திருந்த கோவைவாசிகள் வசமாக பிடித்துக் கொண்டார்கள்.

அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது.

காலையில் கைது செய்து மாலையில் விட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் அதுவும் கோவைவாசிகள் பின்னால் இருக்கிறார்கள் ஹைதர் அலியும் நம்முடன் இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் பூட்டு உடைப்பு போராட்டத்தில் இறங்கி கைதானார். ரிமாண்ட் செய்யப்பட்டதும் அவரது முகம் எந்த அளவுக்கு வெண்மையாக ஆனது என்பதை அவருடன் இருந்தவர்கள் அன்றே சொன்னார்கள். ஹைதர் அலி நன்றாகவே அறிவார்.

குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார்.

அப்பொழுது அவரது விடுதலைக்கு த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாதான் கதி என்றானது. எப்படியாவது உடனடி விடுதலைக்கு வழி செய்ய வேண்டும் என அவரை முடுக்கி விட்டார். பா.ம.க. மாநில பொருளாளர் என்ற பின் பலத்துடன் இருந்த த.மு.மு.க. மாநில தலைவர் குணங்குடி ஹனீபா களத்தில் இறங்கினார். த.மு.மு.க. மாநில அமைப்பாளர் பி.ஜைனுலாப்தீனை விடுதலை செய்யாவிட்டால் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டு முன் மறியல் என அறிவித்தார். விளைவுசிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் விடுதலை செய்யப்பட்டார்.

மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார்?

இது இப்பொழுதுள்ள யாருக்குத் தெரியும். அதனால்தான் மற்றவர்களை கோழைகளாக சித்தரிக்கிறார். மகா கோழை மகத்தான கோழை மட்ட ரகமான கோழை யார் என்பதை வரலாறு உள்ளவர்கள் அறிவார்கள்.

மீசைக்காரன் சரி இல்லை.

பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்துவோம் என்ற வீரியமிக்க போராட்டத்தை அறிவித்தார் த.மு.மு.க. மாநில தலைவராக இருந்த குணங்குடி ஹனீபா. சிறைக்கஞ்சா வீரியமிக்க மாவீரன் ஜைனுல் ஆபிதீன் வெளிநாட்டுக்கு போன் போட்டு என்ன சொன்னார். மீசைக்காரன் சரி இல்லை. அவன் நம்மளை அவன் வழியில் இழுக்கப் பார்க்கிறான். அவன் அறிவித்த பாராளுமன்ற தொழுகை போராட்டத்தை நடத்தினால் பா.ம.க.வில் அவனுக்கு செல்வாக்கு கூடி விடும். எனவே பாராளுமன்ற தொழுகை போராட்டம் வேண்டாம் என்றார்.

இந்த போராட்டம் வேண்டாம்.

நீங்களும்தானே பாபரி மஸ்ஜிதை கட்டித் தராவிட்டால் பாராளுமன்றத்தை பள்ளிவாசலாக ஆக்கி தொழுகை நடத்துவோம் என்று பேசி உள்ளீர்கள் என்றதற்கு அப்படி பேசினால்தான் இந்த போராட்டம் வேண்டாம் என்று நாம் சொல்ல முடியும் என்றார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம்.

டெல்லிக்கு போகும்போது முன்னெச்சரிக்கையாக சென்னையிலேயே கைது செய்து விட்டால் சென்னை போலீஸ் பிரச்சனை இல்லை. போராட்ட தேதி முடிந்ததும் விடுதலை செய்து விடும். விடுவிக்காமல் நாளை நீடித்தால் ஹனீபாவுக்காக பா.ம.க. களத்தில் குதிக்கும். ஒரு வாய்தாவில் விடுதலை கிடைத்து விடும். வட நாட்டில் கைது செய்யப்பட்டால் முதலில் மொழி தெரியாது. பா.ம.க. செல்வாக்கு அங்கு பயன்படாது. எனவே மாதக்கணக்கில் சிறையில் கிடக்க வேண்டி வரலாம். எனவே பாராளுமன்றத்தில் தொழுகைப் போராட்டம் என்பது சாத்தியப்படாது என்றார் சிறைக்கஞ்சா மாவீரன்.

மக்களே மறந்து விடுவார்கள்.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள் நடத்துவதே நமக்கு நல்லது.எனவே இப்பொழுது குளிர் காலம் என்று போராட்ட நாளை ஒத்தி வைப்பதாகக் கூறி அப்படியே கிடப்பில் போட வேண்டியதுதான். அடுத்தடுத்து வரும் போராட்டங்கள் மூலம் பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்களே மறந்து விடுவார்கள் என்றார். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன்.

கேடயமாக பயன்பட்டவர் பாக்கர்.

பாராளுமன்ற தொழுகைப் போராட்ட அறிவிப்பை மக்கள் மறக்க கவர்னர் மாளிகையில் தொழுகைப் போராட்டம் நடத்தினார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். மதுரை ராஜகோபாலன் கொலை வழக்கில் பி.ஜெ. கைது செய்யப்படாமல் இருக்க கேடயமாக பயன்பட்டவர் பாக்கர். அந்த பாக்கரை கோழையாக சித்தரித்துள்ளார் பி.ஜெ.

இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

இது உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே அவர் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1996இல் அவர் சவால் விட்டு பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க பாராளுமன்றத்தை தொழுகை இடமாக ஆக்கும் போராட்டத்தை ஜைனுல் ஆபிதீன் அறிவிக்க வேண்டும். அறிவிக்க வேண்டும் என்றால் முன்போல் அறிவித்து நாடகமாடக் கூடாது. டெல்லி சென்று போராட்டத்தை நடத்திக் காட்டட்டும். அதன் பிறகு இவர் மற்றவர்களை கோழை என சொல்லட்டும்.

நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.

அடுத்த ஆண்டு (1998டு)க்குள் பாபரி மஸ்ஜிதை கட்டித்தராவிட்டால் அடுத்த ஆண்டு அயோத்தி நோக்கி நடை பயணம் செல்வோம் என்று 1997இல் கர்ஜித்தார் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன். 98 போய் 2008டும் போய் விட்டது. போயஸ் தோட்டத்து பொன்மகளை பார்க்கத்தான் மாவீரனாய் நடை பயணம் போனார். அயோத்தி நோக்கி நடை பயணம் என்றால் நடை பிணமாக ஆகி விடுகிறார் என்பதுதான் உண்மை.

முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இதை உண்மை இல்லை என்று மறுத்தால் உண்மையிலேயே ஜைனுல் ஆபிதீன் சிறைக்கஞ்சா மாவீரன்தான் என்றால் 1997இல் அவர் கர்ஜித்து பேசியபடி பாபரி மஸ்ஜிதை மீட்க அயோத்தி நோக்கி நடை பயணம் செல்லட்டும். அதன் பிறகு அவர் யாரை கோழை என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். ஒருவன் மற்றவர்களை கோழை என்று விமர்சிப்பதாக இருந்தால் முதலில் தான்கோழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் நிரூபிப்பாரா?

இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா?

அந்நஜாத் ஆசிரியர் அபூஅப்துல்லாஹ் பற்றி வண்டி வண்டியாகக் குற்றம் சாட்டினார். கோர்ட்டுப் போனதும் தொண்டிக் குதிரை நொண்டிக் குதிரையாக ஆனது. இது வீரமிக்க செயலா? இது சிறைக்கஞ்சா மாவீரன் செய்யும் செயலா? சந்தி சிரிக்கிறது.

கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

பஸ்லுல் இலாஹி தாயகம் வர மாட்டான் வர முடியாது. வந்தால் சிவில் கிரிமினல் வழக்குப் போடுவேன் என்றார். அவரது சவாலை ஏற்று பல முறை தாயகம் வந்தோம். தாராளமாக வழக்குப் போடுங்கள். நீங்கள் தொடரும் வழக்கை கொண்டே தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணம் நீங்கள்தான் என நிரூபித்து உங்களை சிறையில் தள்ளுவேன் என்றோம். அவ்வளவுதான் சிறைக்கஞ்சா மாவீரன் கோர்ட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்.

காரைக்காலில் இமாம் அலியை தங்க வைத்து விட்டு பெண்களை கேடயமாக்கி தன்னைக் காத்துக் கொண்டவர்தான் சிறைக்கஞ்சா மாவீரன் ஜைனுல் ஆபிதீன் . பெண்களைக் கேடயமாக ஆக்கிய பெட்டை யார் என்பதை இப்பொழுது சொல்லுங்கள்

நன்றி - செங்கிஸ்கான்ஆன்லைன்.காம்

திங்கள், 17 மே, 2010

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

மேற்குறிப்பிட்ட பழமொழி ஏட்டளவுக்கு பழமையாக இருந்தாலும் இன்றைய சமகால சூழ்நிலையில் பலருக்கு கனகச்சிதமாக பொருந்தும் குறிப்பாக ஏகத்துவம் பேசி கொண்டு ஏகாதிபத்திய உணர்வோடு செயல்படும் பிதற்றல் ஜென்மங்களுக்கு நிறையவே பொருத்தமாக இருக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை பற்றி பிறருக்கும் உரைக்கும் போது அற்புதமாக பேசும் இவர் ஏகத்துவம் பேசும்போது மட்டும் அல்லாஹ்வின் ஆற்றலை மீறி அல்லாஹ்வுக்கே உண்டான தனித்தன்மையான உள்ளங்களை உளவு பார்க்கும் தன்மையை தனக்குண்டாக்கி ஏகத்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் என்ற பட்டியல் தயாரித்த மாமேதை பரிசுத்த மகான் ? இன்றைய பிதற்றல் ஜென்மத்தின் அவதூறு பிரச்சாரத்தை பற்றிதான் இந்த கட்டுரை :


காலங்கள் பல சென்றாலும் நிகழ்வுகள் நித்தம் நம்மை பின் தொடர்ந்து வரும் ! மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படும் நாள் மிக சமீபத்தில் தான் உள்ளது. விசுவாசிகள் இதை நன்கு அறிந்து இருப்பார்கள். ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்து சொல்வதில் மட்டும் கவனம் செலுத்தும் பிதற்றல் ஜென்மம் அதன்பால் சார்ந்து வாழ்வதை அறவே புறந்தள்ளி வருவதை உலகம் நன்கு அறிந்ததுதான். இஸ்லாத்தின் கட்டாய கடமைகளின் பிரதான கடமையான தொழுகையைக்கூட சரிவர நிரைவேற்ற முடியாத இந்த பிதற்றல் ஜென்மத்தின் சமீபத்திய கூற்று பிறரை பின்தொடர்ந்து ஆராய்வது தான் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் பிறரின் குறைகளை ஆராய்வதை விரும்பாதவர்கள் அதிலும் அவதூறை முற்றிலும் விரும்பாதவர்கள். நபிகளாரை போற்றி பேசும் இந்த பிதற்றல் ஜென்மம், மறந்தும் கூட அவர்களின் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. மாறாக பிறரின் தவறுகளை ஆராய்வதில்தான் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை செலவளித்து இருக்கிறார். இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பகரும்.


இப்ராஹீம் நபியின் வீர வரலாற்றை பலர் நன்கறிந்திருப்பார்கள். அவர்களின் பாணி காபிர்களின் (நிராகரிப்பாளர்களின்) இடத்திற்கே சென்று ஏகத்துவத்தை போதிப்பது தான் இப்ராஹிம் நபியின் வரலாற்றை பேச சொன்னால் மணி கணக்கில் பேசும் இந்த பிதற்றல் ஜென்மம் அவர்கள் பானியில் பிறர் செயல்படுவதை விரும்பாதவர் காரணம் தன்னுடைய ஏகத்துவம் அன்டு கோ. மட்டும்தான் பிற மக்களுக்கு போதிக்க வேண்டும் மற்றவர்கள் போதிக்க, இல்லை இல்லை இருக்கவே கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பபட்டு வருபவர்தான் இந்த பிதற்றல் ஜென்மம்.


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாய பணி கண்டு தாங்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் தன்னால் பழி சுமத்தி வெளியாக்கப்பட்டவர்கள் தடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்ற உள்ளக் களிப்பில் தன்னை மறந்து இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உதித்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இதனை சற்றும் பொறுக்க முடியாத இந்த பிதற்றல் ஜென்மம் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்து நிருத்த தன்னால் முடிந்த அனைத்து சூழ்ச்சியையும் ? செய்ய துணிந்தார் கேவலம் மிஞ்சியது அவமானம்தான் டிசம்பர் 6ஐ கொச்சைபடுத்தி பார்த்தார் அதிலும் தோல்விதான் மீடியாக்கள் சூழ்ந்து நடந்த போராட்டம் என்பதால் உலகம் கண்டு கொண்டது இந்த இழிசெயல் பிறவியின் எழுத்து விபச்சாரத்தை.


தற்போது மற்ற சகோதரர்களின் மேடை ஏறி ஏகத்துவத்தை மொழிந்துவிட்டு வந்திருப்பவரை பார்த்து பொருக்க முடியாமல் தனக்கே உண்டான பாணியில் கொச்சை படுத்தியிருக்கிறார். இந்த இழி பிறவி, சிலை வணக்கம் கூடாது என்று சிற்பங்கள் இருக்கும் இடத்தில் சென்று உறைப்பது வீரமா ! அல்லது நம்மவர்களின் செலவில் மேடை அமைத்து நமக்கு மத்தியில் பேசுவது வீரமா ! ஆணவமும் காழ்ப்புணர்வும் ஆதிக்க மனப்பான்மையும் அதிகரிக்கும்போது ஆற்றல்மிகு மூளையும் திறனற்று போய்விடும் என்பதற்கு இந்த இழி பிறவி ஓர் உதாரணம் இனியாவது பிறர் புறத்தை நுகர்ந்து பார்க்காமல் சரிவர நடக்குமா இந்த பிதற்றல் ஜென்மம் பொருத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.


தோலுரிப்பது தொடரும்....

இப்படிக்கு
இறையடியான்


நன்றி - செங்கிஸ்கான்ஆன்லைன்.காம்

ஞாயிறு, 16 மே, 2010

முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மாநாடு என்ற பெயரில் மக்களை அழைக்கின்றனர். அழைக்கட்டும் தவறில்லை ஆனால் அழைக்கும் போதே பொய்யை சொல்லி அழைக்கின்றனர். தீவுத் திடலில் 15 லட்சம் முஸ்லிம்கள் என்ற மாபெரும் பொய்யை கூறி அழைக்கின்றனர். இவர்களது பொய்யை பார்த்து உளவுத்துறை வட்டாரம் சிரிக்கிறது. 15,000 பேரை தாங்காத தீவுத்திடலில் 15 லட்சம் பேரை கூட்டுவதாக இருந்தால் ஒருவருக்குமேல் ஒருவராக 100 பேரை அடுக்கினால் தான் உண்டு. தீவுத்திடலில் கூடிய பெரிய கூட்டம் சோனியா கலைஞர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் 15,000 சேர் போடப்பட்ட ஒரே கூட்டம்.


ஆனால் மக்களை மடையர்களாக்க, பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தின்படி, 15 லட்சம் என்று மக்கள் மனதில் பதியவைத்து பின்னர் அறியாத மக்களிடம் அதையே 15 லட்சமாக்கும் வித்தை அண்ணணுக்கு கை வந்த கலை. மற்றவர்கள் மாநாடுகளில் மக்கள் எண்ணிக்கையை குறைத்தும் தங்கள் மாநாட்டில் மக்கள் எண்ணிக்கையை கூட்டியும் காட்டும் கணக்கை எங்கே கற்றாறோ தெரியவில்லை.


கடந்த 2008 அக்டோபர் 13 அன்று சென்னையில் நடந்த பேரணியில் மூவாயிரம் பேரை தாண்டாத (மாநிலம் முழுவதும் இருந்து) மக்களை உணர்வில் லட்சக்கணக்கான மக்கள் என்று எழுதினார்கள். மார்க்கத்திற்காக கூட பொய் சொல்லக்கூடாது. எனும்போது, குருடர்கள் பார்க்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் என்பதை நாம் விமர்சிக்கும் போது, கேவலம் அரசியல் வாதிகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெறுவதற்கும் ஏன் பொய் சொல்லுகின்றீர்கள். இட ஒதுக்கீடு எனும் பொதுப்பிரச்சனைக்காக மக்களை கூட்டிவிட்டு அதை வைத்து தங்கள் பக்கம் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என்று காட்டி, வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னைiயும் தன் இயக்கத்தையும் வளர்த்துக் கொள்ள மக்களை மடையர்காளக்குவதா?


15 லட்சம் முஸ்லிம்கள் கூட வேண்டும் என்றால் 30,000 பஸ்களில் 40 பேர்வீதம் வந்தால் கூட 12 லட்சம் தான் வருகிறது. 30,000 பஸ் என்றால் எத்தனை கிலோமீட்டருக்கு நிறுத்த வேண்டும் தெரியுமா ?


இதைச் சொன்னால் சில சகோதரர்கள், கோரிக்கையை முன்வைத்து போராடும் போது எண்ணிக்கை பற்றி பேசி நம்மை நாமே குறைத்து காட்டுவது அந்த கோரிக்கையை பாதிக்காதா? என கேட்கின்றனர்.


இதே கேள்வியை அவர்களிடம் நாம் கேட்கிறோம் டிசம்பர் 6 அன்று ப.சிதம்பரம் வீடு முற்றுகையிட்டு கைதான போது நாமும் கோரிக்கையை முன்வைத்து தான் போராடின தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து உணர்வைக்காட்டி நம்விடுதலைக்கு போராடிய நேரத்தில் இவர் என்ன சொன்னார்? ஆயிரக்கணக்கானோர் கைது என்றால் சில ஆயிரம் பேராவது இருக்க வேண்டும். வீடியோவை ஓடவிட்டு இவர்களின் தலைகளை எண்ணிவிடலாம். இவர்களை அடைத்து வைத்துள்ள மண்டபத்தின் அளவு எவ்வளவு சதுரடி? என்றெல்லாம் கொச்சைப்படுத்தினார். இப்போது தனக்கு எனும் போது வலிக்கிறது.


மேலும் இடஒதுக்கீடு பொதுவான கோரிக்கை முஸ்லிம்கள் எங்கள் பின்னால் வந்தே தீரவேண்டும் வேறு வழியில்லை. என்றெல்லாம் கூறுகின்றீர்களே ! நீங்கள் எத்தனை பொதுவான கோரிக்கைகளுக்காக மற்ற மாநாடுகளில் பங்கேற்றீர்கள்? நீங்கள் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏன் சொல்லுகின்றீர்கள்? இது அல்லாஹ்விடத்தில் வெறுப்புக்குரியதாகும். என்பது உங்களுக்கு தெரியாதா? பீஸ் போன்ற மார்க்க மாநாடுகளுக்கே மற்றவர்கள் அழைத்தால் யாரும் போக கூடாது நீங்கள் அழைத்தால் அரசியல் மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும் என்பது என்ன நியாயம். பொதுவான கோரிக்கை என்று இப்போது பேசும் நீங்கள் இந்த கோரிக்கைக்காக மற்ற இயக்கங்களை அழைத்து எத்தனை முறை பேசியுள்ளிர்கள்! பேச வேண்டாம் மற்ற அமைப்புகளுக்கு அழைப்பாவது விட்டீர்களா? சுன்னத் ஜமாஅத் மக்களை வரவேண்டும் என கூறும் நீங்கள்> முஸ்லிம் லீக், தமுமுக, இதஜ, எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்காதது ஏன்?


மற்ற நேரங்களில் மற்ற முஸ்லிம்களை முஸ்லிம் இல்லை நாங்கள் மட்டுமே பரிசுத்த முஸ்லிம்கள் என பிராமணியம் பேசி, மற்ற பள்ளிகளில் தொழக்கூடாது மற்ற முஸ்லிம்களின் பின்னால் தொழக்கூடாது மற்றவர்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மாநாடுகளுக்கு பேசக்கூடாது என இஸ்லாத்தில் இல்லாத தீண்டாமையை கடைபிடிக்கும் நீங்கள் இப்போது மட்டும் முஸ்லிம்களை வாருங்கள் என அழைப்பது ஏன் ? என்று கேட்டால் உலக கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் மறுமைகணக்கில் அவர்கள் முஸ்லிம்களா? என்று கேட்கின்றீர்களே மறுமை கணக்கில் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? என்பது அல்லாஹ் அறிந்த விஷயம் அல்லாஹ்வின் அதிகாரத்தை நீங்கள் ஏன் கையில் எடுக்கிறீர்கள்?


உங்கள் கொள்கைப்படி உங்கள் இயக்கத்தினர் தவிர யாரும் முஸ்லிம் இல்லை! இஸ்லாமிய கொள்கைப்படி நீங்களும் முஸ்லிம் இல்லை! ஏனென்றால் உங்களிடம் தொழுகை இல்லை பின் எப்படி 15 லட்சம் முஸ்லிம்கள் தீவுத்திடலில், இதைச் சொன்னால் தொழுகையை பற்றி பேசாதீர்கள். அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது. என்று சப்பைக்கட்டு கட்டுகின்றீர்கள். தொழுகை அவருக்கும் அல்லாஹ்விக்கும் உள்ளது என்றால் ஷிர்க், பித்அத், வரதட்சனை, வட்டியை பற்றி பேசுகிறீர்கள் அது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் என்று அவர்கள் கூற மாட்டார்களா?


மார்க்க ரீதியில் ஒருவனின் தொழுகையை பற்றி சுட்டிக் காட்டலாமா ? என்று கேட்கின்றீர்களே ருக்கூவையும் சுஜூதையும் சரியாக செய்யாதவன் தொழுகை திருடன் என நபி (ஸல்...) சுட்டி காட்டும் போது முழுத் தொழுகைகளையும் திருடுபவரை சுட்டிக்காட்டக் கூடாதா?


சுப்ஹூ தொழ வராதவர்களை வீட்டோடு எரிக்க நினைத்ததுண்டு என நபி (ஸல்...) சுட்டிக்காட்டவில்லையா? சுப்ஹூ தொழுகையும், இஷாவையும் விடுவது முனாபிக்கின் அடையாளம் என இப்படிப்பட்டவர்களை நபி (ஸல்...) அவர்கள் அடையாளம் காட்டவில்லையா? கண் தெரியாத சஹாபாவிற்கே பாங்கு சத்தம் கேட்டால் பள்ளியில் தொழுவது கட்டாயம் என்று நபிகள் எடுத்து சொல்லவில்லையா? கடைசி மூச்சுவரை கால் தரையில் இழுபட நபி (ஸல்...) தொழ வந்தார்கள். என்ற ஹதிஸ் எல்லாம் மக்களுக்குத்தானா! மவ்லவிகளுக்கு இல்லையா? உங்களை மறந்துவிட்டு மக்களை நன்மை செய்ய ஏவுகின்றீர்களா? இவ்வளவு ஏன் மீலாது விழா நடத்துபவர்கள் ஊர்வலத்தில் உட்கார்ந்து கொண்டு தொழமாட்டார்கள்.


அஸர் போகும், மஃரிப் போகும் ஆனால் ஊர்வலம் போகும் என இவர் மற்றவர்களை விமர்சித்தாரா இல்லையா ஆகையால் வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு இயக்கநிர்வாகிகள் அவரை ஜமாஅத்தோடு தொழச்சொல்லுங்கள் நபி ஸல் கூறுவது போன்று ஷிர்க் மற்றும் குப்ரிலிருந்து காப்பாற்றுங்கள் முஸ்ஸிமாக அவர் முதலில் தொழுகட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும் ஏனெனில் தொழுகையில்லாதவனுக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை என்பது நபி ஸல் அவர்களின் வாக்கு!

செங்கிஸ்கான்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்ஆன்லைன்

செவ்வாய், 11 மே, 2010


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே. (பிஜே)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருகுர்ஆனில் (49:6) கூறியிருப்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். “கேள்விப்படுவதை எல்லாம் பரப்புவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்” என்ற நபி மொழிக்கு இணங்க ஏகத்துவத்தை பின்பற்றுவதாக கூறும் நாம் எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை உணராமல் பரப்பிவிடக்கூடாது.

அல்லாஹ் தஆலா திருமறையில் “பாதுகாப்பு பயம் பற்றிய செய்தி கிடைத்தால் உடனே பரப்பி விடுகின்றனர்.அதை அதிகாரமுள்ளவர்களிடத்தில் கொண்ட சென்றிருந்தால் அதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராய்ந்திருப்பர்” என்று கூறுவதன் மூலம் பொருப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் பொய் பரவுவதற்கு காரணமாகி விட கூடாது.

அந்த வகையில் மக்களிடையே மார்க்க அறிஞர் என அறியப்படும் இவர் குர்ஆனை ஆராய்ந்து தான் பின்பற்ற வேண்டும். ஸஹாபாக்கள் உட்பட எவரது கூற்றையும் ஆதாரமின்றி பின்பற்ற கூடாது! (அருமை ஸஹாபா அபுல் ஆஸ் (ரழி) அவர்களை கிரிமினல் என்று விமர்சித்தார். ஆரம்பத்தில் நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை என மழுப்பிய அவர், அதன் பிறகு கிரிமினலை கிரிமினல் என்றால் என்ன தவறு? என வாதித்தார் என்பது தனி கதை) எனக்கூறும் இவர் நடைமுறையில் இதற்கு நேர் முரணாக தனக்குவரும் ஆதாரமற்ற செய்திகளை அப்படியே பரப்பிவிடுவதை பலசந்தர்பங்களில் செய்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நெல்லை யாதவ மாநாட்டில் கலந்து கொண்ட பாக்கரை, சிலை திறப்பு விழாவில் பாக்கர் பங்கேற்று, தவ்ஹீதை விட்டு தடம்புரண்டு விட்டதாக அவர் ஆளுமையில் நடக்கும் இணையதளத்திலும் பத்திரிக்கையிலும் அவதூறாக செய்தி வெளியிட்டு இருந்தார். கையில் வாக்கி டாக்கியுடன் தேவநாதன் நிற்கும் படத்துடன் வெளிவந்த பத்திரிக்கை செய்தியினை ஆதாரமாக கொண்டு இந்த அவதூறை அருமையாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்.

இந்த அவதூறுக்கு மறுப்புத் தெரிவித்து செய்தி வெளியிட்ட பிறகும், தேவநாதன் கையில் வைத்திருந்தது வாக்கி டாக்கிதான் என விளக்கம் கொடுத்த பிறகும், நம்மை கிண்டல் அடித்து ரிமோர்டுக்கும் வாக்கி டாக்கிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் போல் கேலி செய்து அவதூறு செய்கிறார். ஒரு சாண் அளவிற்கு ஆண்டனா உள்ள ரிமோட் இந்த காலத்தில் இந்த பொய்யன் ஜேக்காக மட்டும் உருவாக்கி இருக்கிறார் போலும்.

சிலை திறப்பு விழாவை புறக்கணித்து இடஒதுக்கீட்டு மாநாட்டில் மட்டும் பங்குபெற்று அங்கும்கூட “உங்களின் இந்த சிலைகளால் எந்த நன்மையுமில்லை” என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், இப்ராஹிம் (அலை) வழியில் சத்தியத்தை எடுத்துரைத்த செய்தியை மறைத்து பொய்யை வழிந்தோடி பரப்பிக் கொண்டு இருக்கிறார்.
நம் செய்தியினை மட்டும் அல்ல, தான் கேட்டதை எல்லாம் அப்படியே பரப்ப கூடியவர் என்பதற்கு கீழே சில சம்பவங்களே நல்ல உதாரணம்.

இதுவரை நிரூபிக்காத ஆலயபிரவேசம்!

திருமாவளவனோடு பாக்கர் கைகோர்த்து ஆலயப்பிரவேசம் செய்தார் என்று இவர் அள்ளிவிட அதை அல்தாபி அப்படியே வாங்கி குவைத் நிகழ்ச்சி மேடை ஒன்றில் அள்ளிவிட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நிரூபிக்க தயாரா? என இதைபற்றி இதஜ எழுப்பிய சவாலுக்கு இன்று வரை பதிலில்லை.

இம்பீரியல் ஹோட்டல் பொய்

2009 ஜனவரி 6ஆம் தேதி இம்பீரியல் ஹோட்டலில் பாக்கர் மற்றும் இதர நிர்வாகிகள் நீக்கல் சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், விண் டிவியில் ததஜவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக மேடையில் ஒருவர் வந்து இந்த பொய்யன் ஜேயிடம் சொன்னப் பொழுது, அதை தீர விசாரிக்காமல் வந்த செய்தியை அப்படியே ஆராயாமல் மக்களிடம் அள்ளிவிட்டார். ஆனால் விண்டிவியில் ஜனவரி 23ஆம் தேதிதான் ததஜ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கியை திவால் ஆக்கிய அண்ணன்

ஐசிஐசிஐ வங்கி திவாலாகிவிட்டது உடனே உங்கள் பணங்களை எல்லாம் எடுத்துவிடுங்கள் என தனக்கு வந்த ஆதாரமற்ற செய்தியை அப்படியே எஸ்எம்எஸ்-ல் செய்தியினை பரப்பினார். இதனால் ஐசிஐசிஐ நெருக்கடிக்கு உள்ளானது. இது வீண் வதந்தி என அவ்வங்கி அறிவித்தும், நடவடிக்கைக்கு பயந்து பின்வாங்கினார்.

வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும்

வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைப் போனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க பின்வாங்கினார்.

இரு முறை இறந்த நாகூர் ஹனிஃபா

பாடகர் நாகூர் ஹனிஃபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாஃவை இரண்டுமுறை சாகடித்தார்.

இஸ்லாத்தை தழுவிய பில்கேட்ஸ் ?

பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தார். (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?) சேப்பாக்கம் மேடையில் அசடு வழியாமல் இருந்து இருக்கலாம்.

அபூஅப்துல்லாஹ் வாங்கிய சொத்து

அபூஅப்துல்லாஹ் அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என ஊரெங்கும் அவதூறு பரப்பி விட்டு, அவர் நீதிமன்றத்திற்கு இழுத்ததும். நான் அப்படி சொல்லவில்லை என நைசாக வழக்கிலிருந்து நழுவினார்.

சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல்லாஹ்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதீனத்திடம் திருக்குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லாஹ் என நாகூசாமல் அவதூறு பரப்புகிறார்.

பழநி பாபா வைத்திருந்தது யாரை?

மறைந்த பழனிபாபா கடையநல்லூரில் ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பினார். அதை கேட்டு கொதித்துப் போன பழனிபாபா பதிலுக்கு, “ நான் வைத்திருந்தது உன் மனைவியைத்தான்” என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும், பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும், மற்ற தலைவர்களை தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இவரின் கைவந்த கலை. இதற்காக எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்லக்கூடியவர் என்பதை அறிகிறோம்.

சமூக விஷயங்களில் மட்டும் அல்ல மார்க்க விஷயத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர் ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிர் தரப்பினர் ஸஹீஹான ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது? என இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்டப்பொழுது, அதற்கென்ன? அதை நாம் ளயீஃப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி. இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

இவரது வாய் ஜலாத்திலிருந்து அல்லாஹ் எல்லா மக்களுக்கும் நேர்வழிக்காட்டடும்.

-- மங்கோலியன்

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.ஆன்லைன்

வெள்ளி, 7 மே, 2010

ஆலந்தூரில் ததஜ ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்டது.


மக்கள் பிரச்சினைக்காகப் போராடாமல், தனிநபரை வசைபாடுவதும், ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவதும், அவதூறுதான் என மறுப்புச் சொன்னப் பிறகும், இஸ்லாம் வெறுக்கும் துவேஷத்தை தமது பிரதான வேலையாக வைத்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் இருந்த டிஎன்டிஜே ஆட்டோ ஸ்டாண்டு கலைக்கப்பட்டு, அப்படியே ஐஎன் டிஜே ஆட்டோ ஸ்டாண்டாகவாக மாறியது.
டிஎன்டிஜே ஆட்டோ ஸ்டா ண்டை கலைத்துவிட்டு ஐஎன்டிஜேவிற்கு மாறப் போவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இதஜ மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்தீக், மருத்துவரணி செயலாளர் கலி முல்லாஹ் ஆகியோர் தலைமையில், மாவட்டத் தலைவர் ஹஸன் அலி, செயலாளர் எஸ்.எம். ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் முபாரக் அலி, வர்த்தகர் அணி செயலாளர் எம்.எஸ். ஷர்புத்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆன்லைன்.இன்

புதன், 5 மே, 2010


சீ... சீ...... வெட்ககேடு........... து..... து........மானக்கேடு

பாலியல் புகார் காரணமாக நெல்லை மாவட்ட செயலாளர் சாதிக் மற்றும் மேலப்பாளையம் நகர தலைவர் சிபில்லை மைதீன் இருவரிடமும் TNTJ ராஜினாமா வாங்கி உள்ளது........................

நன்றி - முஹம்மது பஸ்லுல் இலாஹி வலைத்தளம்.

செவ்வாய், 4 மே, 2010

பாக்கர் யாதவ் என்றால், பிஜெ என்ன பறையரா?

யாதவ மகா சபை சார்பில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு மாநாட்டில் பங்கேற்ற நம் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கரை, பாக்கர் யாதவ் என மிக மோசமாக விமர்சனம் செய்தார் பி.ஜைனுல் ஆபிதீனும் அவரது ஆளுமையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும். அந்த மாநாட்டிற்கு முன் நடைபெற்ற சிலை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பத்திரிக்கையில் வந்த செய்தியினை ஆதாரம் காட்டி பாக்கர் சிலை திறந்ததாக அவதூறு பரப்பினர். இது முற்றிலும் அவதூறு என அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இன்னும் அவதூறை தொடர்கின்றனர்.

ஆனால் அவர், 1997இல் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரத்தில் கொல்லப்பட்ட முருகன் என்ற இளைஞனின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி வீர வணக்கப் பொதுக்கூட்டமாக திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.


அதில் கலந்து கொண்டு பிஜே உரையாற்றினார். இது குறித்து மதுரையைச் சேர்ந்த ஜாக் சகோதரர்கள் பிஜெயிடம் “இது இஸ்லாத்திற்கு முரணான செயல் இல்லையா?!” என கேள்வி எழுப்பிய பொழுது ”அவன் எதை திறந்தா என்ன, நாம் சத்தியத்தை சொல்வோம்மா.. என பதிலளித்தார்.


தான் 1997-இல் செய்ததை வசதியாக மறந்து விட்டு, இன்று பாக்கரை யாதவ் என வசைபாடும் பிஜேயே நீங்கள் என்ன பறையரா?! என நியாயம் உள்ளவர்களே கேளுங்கள்.


-செங்கிஸ்கான்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆன்லைன்.காம்

திங்கள், 3 மே, 2010

பல கணவுகளோடு வளம் வர இருக்கும் இவர்களை சமுதாயமே புறக்கணிப்பீர்!!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

அரசியல்வாதிகளை தன்பக்கம் இழுக்க ஒரு பேரணி மாநாடா!!!

1995 க்கு முன்னாள் சிதறிகிடந்த,கேட்பாரற்று நின்ற முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றினைத்து அவர்களின் உரிமைக்காக்க வீதிக்கு வந்திருக்கிறோம் என்று மார்தட்டி சமுதாய வீதியில் பம்பரமாய் சுழன்று ஒரு மாபெரும் சமுதாய இயக்கத்தை வளர்த்ததோடு உறங்கி கடந்த முஸ்லிம் சமுதாயத்தை தட்டி எழுப்பி உங்கள் உரிமைகளை அரசியல்வாதிகளும்,ஆளும்வர்க்கமும் திட்டம் தீட்டி பரிக்கிறார்கள்.அவர்களிடம் இருந்து நமது உரிமையை பெற நமக்கென்று தனி இயக்கம் தேவை என்று இளைஞர் சமுதாயத்தை ஒன்றினைத்தோம்.

ஆனால் அந்த இளைஞர் சமுதாயத்தை இன்று பல்வேறு பிரிவுகளாக எவர்கள் ஒன்றினைக்க வீதிக்கு வந்தோம் என்று மேடைக்கு மேடை தங்களை பரைசாற்றினார்களோ, அவர்களே நம் சமுதாயத்தையும் இளைஞர்களையும் பல்வேறு பிரவாக கூறுபோட்டார்கள். தனக்கென்று ஒரு தக்லீத் கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு மற்ற அணைத்து இயக்கத்தையும் தரம் தாழ்த்தி பேசுவது, அவர்கள் சமுதாயத்தின் உரிமைக்காக பேரணியோ,மாநாட்டையோ அறிவித்து செயல்படும்போது அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தனக்கே உரிய பானியில் (பேச்சு திறமையால்) சமுதாயத்தை வழிகெடுக்க நினைப்பது.அந்த பேரணியும் மாநாடும் வெற்றிபெற கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுவது.

அந்த நேரத்தில் தனது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர் ஓய்வு எடுக்க சொன்னாலும் அடுத்தவர்களை எதிர்த்து தன் இருப்பை காட்டிகொள்வதற்காக வீதி தோறும் தன் கூட்டத்தார் மூலம் மேடை அமைத்து அந்த மேடையிலேயே முதலில் ஒன்றும், கடைசியில் ஒன்றும் என்று தடம் புறள்வது, தன் சமூக மக்கள் ஆட்டுமந்தைகள் என்று தனக்கு தானே கற்பனை செய்துகொண்டு செயல்படுவது போன்ற மாயாஜால வேலைகளில் ஈடுபட்டு அடுத்த இயக்கங்களின் வளர்ச்சியை (அல்லாஹ்வை மறந்து) தடுக்க நினைப்பது.அளித்துவிடுவேன் என்று கர்ஜிப்பது போன்ற தரங்கெட்ட செயல்களில் தான் ஒரு மவ்லவி (மார்க்க மேதை) என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார்.

தமுமுக கடந்த 2007ல் தனது தொண்டர்களோடும்,சமுதாய போராளிகளோடும் தலைநகர் டெல்லி சென்று பல்வேறு சிறமங்களுக்கு மத்தியில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணியையும் அதன் இறுதியில் ஒரு மாநாட்டையும் நடத்தியது.இவர்கள்தான் இந்திய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகளோ என்று ஆட்சியாளர்களும் அரசியல்கட்சிகளும் நினைக்கும் வண்ணம் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களை தன்மேடையில் அமரவைத்து தனது உரிமையை எங்கு எடுத்துவைத்தால் நிறைவேறும் என்பதை விளங்கி செயல்பட்டது.அதில் இறைவன் நாடினால் வெற்றியும் நமக்கு உண்டு என்பது நம் சமுதாயம் அரிந்ததே.

ஆனால் அன்று இந்த சகோதரரும் (இவர்களது முன்னால் நம்பிக்கை குரியவர்களின் பார்வையில் தனிநபர் ஜமாத்தின் தலைவர்) இவரின் தக்லித் கூட்டமும் என்ன செயத்தார்கள், எப்படி தமுமுக ஆரம்பிக்கப்பட்டு இடஒதுக்கீடு உரிமையை முதன் முதலில் எடுத்து வைத்தபோது அன்றைய முஸ்லிம் லீக் (பதவிகளின் அடிமைகள்) பேரூந்து போகாத ஊருக்கு தமுமுக வழி சொல்கின்றது என்று விமர்சித்தார்களோ, அதைபோல நமக்கு தமிழ்நாட்டிலேயே இடஒதுக்கீடு கிடைக்கவில்லை இவர்கள் டெல்லி செல்கிறார்களாம் என்று கின்டலடித்தார்கள்.(தமுமுகவிற்கு தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கருணாநிதி தனி இடஒதுக்கீடு வழங்கப்போகிறார் என்பது தெரிந்திருந்தது பாவம் அந்த சகோதரருக்கு தெரியாததுனாலோ அல்லது இவர்களின் போராட்டத்தை கொச்சப்படுத்தவேண்டும் அதற்கு செல்லும் சமுதாய மக்களை தடுக்கவேண்டும் என்பதுனாலோ)

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் ஆட்சியாலர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க வைப்பதற்க்காகவும் அதன் மூலம் தங்களது சுய பேரத்தை பேசுவதற்காகவும் அன்று தமுமுக வலியுறுத்திய அதே கோரிக்கையான இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 இட ஒதுக்கீடு கேட்டு சென்னை தீவுத்திடலில் மாநாட்டை நடத்த போகிறார்களாம்.

சமுதாய மக்களே இவர்களின் நரிதந்திரமான சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள்.மக்களே உங்களை வைத்து நடக்க விருக்கும் தங்களின் அரசியல் பேரத்திற்கு எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா? நாங்கள் தான் சமுதாயத்தின் நம்பிக்கை நட்ச்சத்திரம் என்றும் சமுதாய நலனே தங்களது நலன்! என்றும் சமுதாய வீதியில் கூவப்போகிறார்கள் உங்களை வைத்து அரசியல் நாடகம் அரங்கேற்றப்போகிறார்கள்.

எந்த முஸ்லிம் சமுதாயத்தவர்களை இன்று தங்கள் இருப்பிடத்தை காட்டுவதற்காக சகோதரர்களே!வெற்றியின் முகவரிகளே!முஸ்லிம்களே! முஸ்லிம் சமுதாயமே! என்றெல்லாம் இவர்களால் அழைக்கப்படுகிறதோ. அதே சகோதரர்களை (சமுதாயத்தை) இதற்கு முன்னால் (வழக்கமான பேரணி மாநாட்டிற்கான அழைப்பை தவிர) எங்கள் இயக்கத்தில் (த.த.ஜ) இருப்பவர்கள் மட்டும்தான் உன்மையான முஸ்லிம்கள் (தவ்ஹித்வாதிகள்) நாங்கள் மட்டும்தான் சுவர்க்கம் செல்லக்கூடியவர்கள்,வெற்றியாளர்கள் மற்றவர்களெல்லாம்.....! என்று தங்கள் சஹாக்களை வைத்து மேடை தோறும்,ஊர் தோறும் பேசியவர்கள் இன்று அதே சஹாக்களை வைத்து கூட்டம் கூட்டுவதற்கு (தவ்ஹிதை சொல்வதற்கல்ல) எப்படியெல்லாம் அலைக்கிறார்கள். அல்லாஹ் கொடுத்த மாற்றத்தை பார்த்தீர்களா சமுதாய மக்களே சிந்திப்பீர்....!

தவ்ஹீத் மட்டும்தான் எங்கள் உயிர்மூச்சு, அரசியல் வழிகேட்டின் அறிகுறி என்றெல்லாம் பேசித்திறிந்தவர்கள் அரசியல்வாதிகளோடு (பல கோடிகளுக்கு) கைகோர்பதற்காக உங்களை அழைக்கிறார்கள்.சகோதரர்களே ஏமாந்து விடாதீர்கள்.

ஆகவே சகோதரர்களே இவர்களை நீங்கள் அடையாளம் கண்டு தேர்தல் நேரங்களில் சந்தர்ப்பவாத பச்சோந்திகளாக, சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நல்லவர்,அம்மாவை போல வருமா! என்றவர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தனையும் மறந்து (மறைத்து) கலைஞர் நல்லவர் இட ஒதுக்கீடு தந்துவிட்டார் என்றெல்லாம் நிறந்தர அரசியல்வாதிகளைவிட நாங்கள்தான் முழு நேர பேச்சாளர்கள் போல மேடை தோறும் முழங்கி வந்தவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யாரை நல்லவர் என்று சொல்லப்போகிறார்கள்.சமுதாயத்தின் மக்களை திரட்டிக் காட்டி எதை பேரம் பேசப்போகிறார்கள்.நாங்கள் தான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்று எந்த அரசியல்வாதியிடத்தில் தானாய் வழியெக்கப்போய் நிற்கப்போகிறார்கள்.(நாடாளுமன்ற தேர்தலைப்போல) இப்படி பல கணவுகளோடு வளம் வர இருக்கும் இவர்களை சமுதாயமே புறக்கணிப்பீர்!!!

ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க கூடிய எந்த ஒரு முஸ்லிமும் உன்மையான முஸ்லிமாக இருக்கமாட்டான். என்றும் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் நானா ஒரு போதும் நடக்காது என்று சொல்லி ஜூலை 4 வாழ்வுரிமை மாநாட்டு வளாகத்தில் திரிந்தவர்,பிறகு அதே ஜெயலலிதவோடு (வேற ஜெ அல்ல) ஒரே ரூமில் கூட்டணிப்பேசினார்.அவரேயே ஆதரித்து இந்த தவ்ஹித்வாதி நடிகர்,நடிகைகளோடு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.இந்த தவ்ஹித்வாதிகளை அடையாளப்படுத்தக்கூடிய கொடி தரங்கெட்ட கூத்தாடிகளை வரவேற்று பரந்தன.

கடந்த சட்டமன்றதேர்தலில் கருணாநிதி கோவையில் 19 முஸ்லிம்களை கொன்றவர் அவருக்கா உங்கள் ஓட்டு இல்லை முஸ்லிம்களே கருணாநிதிக்கு வாக்களிக்காதீர்.என்று சொன்னவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே பச்சோந்திபோல் மாறினார்.கருணாநிதிக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இப்பொழுது மக்களை அழைத்து பா.ஜா.கட்சிக்குதான் (கோடிகளுக்காக) எங்களது ஆதரவு என்று முழங்கப்போகிறாரோ?ஒருவேளை அவர்களை (பா.ஜா.க வை) நல்லவர்கள் என்று சொல்லப்போகிறாரோ? அல்லாஹ் காப்பாற்றுவானாக... அவர்களிடமிருந்து நம் சமுதாயத்தை.

--- சமுதாய நலம் விரும்பி ---

நன்றி - மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் வலைத்தளம்.


இயக்கங்கள் பெயரில் பிளவுபட்டுள்ள சமுதாயத்தை ஒன்றினைக்க தவ்ஹீத் ஜமாஅத் செய்தது..!?

1.அனைத்து இயக்கங்களும் சேர்ந்து சகோதரர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) அவர்களுக்கு நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து சமுதாயத்தை ஒன்றிணைத்தது(?)

2.சக தவ்ஹீத் இயக்கத்தலைவரை செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவிற்கு ஒப்பிட்டு சமுதாயத்தை ஒன்றிணைத்தது(?)

3.பிற இயக்கத்தவர்களின் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து சிடிகள் வெளியிட்டு வியாபாரம் செய்து சமுதாயத்தை ஒன்றிணைத்தது(?)

4.சமுதாய நலத்திற்காக கோரிக்கை வைத்து பிற இயக்கத்தினர் மாநாடு நடத்தினால் தங்களால் தான் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதை காட்டுவதற்காக 15லட்சம்(?)முஸ்லிம்களை கூட்டப்போவதாக பிலிம் காட்டி சமுதாயத்தை ஒன்றிணைத்தது(?)

5.முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து நடிகருக்கும் ஐயருக்கும் ஓட்டுப்போடுங்கள் என்று மேடைதோறும் முழங்கி சமுதாயத்தை ஒன்றிணைத்தது(?)

இவைகள் தான் இயக்கங்கள் பெயரில் பிளவுபட்டுள்ள சமுதாயத்தை ஒன்றினைக்க தவ்ஹீத் ஜமாஅத் எனன செய்தது? என்ற கேள்விக்கு சுருக்கமான பதில். விரிவாக இன்ஷா அல்லாஹ் விரைவில்...

அன்புடன்
அப்துல் மஜீத், ஜித்தா

அனாமேதையின் அசிங்கத்தனம்

அஸ்ஸலாமு அழைக்கும் அன்புள்ள சகோதரர்களுக்கு,ஒரு அனாமேதையின் அசிங்கத்தனம்.


சம்சுல் லுஹா அனுப்புவார் முன்பு அனுப்பியும் இருக்கிறார். அவர் மறுத்தால் யாரோடு அனுப்பினார். எப்பொழுது அனுப்பினார். எத்தனை இரவு அனுப்பினார் எத்தனை தடவை அனுப்பினார். ரயிலிலா பஸ்ஸிலா எந்த ஆண்டு என்ற விபரம் வெளியிட தயார்.பொறுமைக்கும் எல்லை உண்டு.
நன்றி - முஹம்மது பஸ்லுல் இலாஹி வலைத்தளம்

இறைவனின் திருப்பெயரால்....


மூன்று சம்பவங்கள்
முஸ்லிம் சமுதாயத்தின் பார்வைக்கு.....

சம்பவம் 1 :

இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரி சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவரிடம் அறுவை சிகிச்சைக்காக அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு மயக்க மருந்தை கையாளுவதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதுபற்றி நமக்கு வந்த தகவலை உறுதிபடுத்தி கொண்டபின் நிர்கதியாய் நின்ற முஸ்லீம் குடும்பத்திற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிப் பயனில்லாமல் போனதால் முற்றுகையை நாம் அறிவித்தோம் !
முதல்வரின் மருத்துவர் என்று இறுமாப்போடு பேசியவரை நமது முற்றுகை இறங்கி வரச் செய்தது. மொத்த செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதன் அடிப்படையில் முற்றுகை வாபஸ் பெறப்பட்டதால், மருத்துவமனைக்கு வெளியே நமது நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சமுதாயத்திற்கு பாடுபடுவதாக கூறும் இந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான பைக்கடைகாரும், களஞ்சியத்தாரும், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்திறங்கி உள்ளே சென்றனர். நாம் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரிக்காக வந்திருப்பார்கள் என நினைத்தோம் போன பின் மருத்துவரை கேட்டால் நமக்கு அதிர்ச்சி ! எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் எங்களிடம் கூறுங்கள் என்று கூற மருத்துவரே தேவையில்லை பிரச்சனையை ஐஎன்டிஜே வினர் சுமுகமாக முடித்துவிட்டார்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
சமுதாயத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட சகோதரி என்று பார்க்காமல் நமக்கு எதிராக களமிறங்குவதற்காக, மருத்துவமனைக்கு ஆதரவாக களம் கண்டு நின்ற போது இவர்களின் உண்மை முகம் நமக்கு புரிந்தது. இந்த கேடு கெட்ட இயக்கத்தினர் எப்படி சமுதாயத்தை காப்போம் என்று கூறமுடியும்.

சம்பவம் 2 :

சென்னை மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சகோதரருடைய வீட்டை வக்கீல் ஒருவர் வாடகையும் வசூல் பண்ணி கொண்டு, காலியும் செய்யாமல் ஆக்ரமித்து கொண்டிருக்க சம்மந்தப்பட்ட சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று, காவல் துறையினரை கொண்டு வக்கீல் தரப்பை வெளியேற்றி விட்டு, மீண்டும் அந்த வக்கீல் ஆக்கிரமித்து விடுவார் என்ற அச்சம் மேலிட மேற்படி இடத்தை நம் ஜமாஅத்வசம் ஒப்படைத்து ஓராண்டு காலம் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என நம்மிடம் ஒப்படைத்து விட்டார். நாமும் நம்முடைய தாஃவா சென்டரை அங்கு துவங்க எண்ணி மறுநாள் மராமத்து வேலைகளை பார்க்க சென்ற நம் சகோதரர்களுக்கு அதிர்ச்சி. பூட்டை உடைத்து வக்கீலின் ஆட்களான சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு தண்ணியடித்து கொண்டு இருந்தனர். உடனடியாக மாநில நிர்வாகிகள் தலைமையில் நம் சகோதரர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாநில செயலாளர் செங்கிஸ்கான் தலைமையில் சென்ற நிர்வாகிகள் மஃரிப் வக்த் வந்ததும் எதிரே இருந்த இவர்களின் தலைமையகத்தில் தொழச் சென்றனர். தொழுகை முடிந்த அனைவரோடும் நல்ல முறையீயல் சலாம் சொல்லி வெளியே வந்த பின் சிறுது நேரத்தில் மாநில நிர்வாகிகள் மளமளபென வந்திறங்கினர். சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு வர அங்கு சென்றால் இவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அந்த பக்கம் சம்மந்தப்பட்ட வக்கீல் ஆதரவாளர்கள் 50பேர் நமக்கு புரியவில்லை எதற்காக இவர்கள் வந்தார்கள் என விசாரித்தால் நீங்கள் அங்கு தொழுகை சென்றது அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாம். மேலும் நீங்கள் அவர்களது தெருவில் தாஃவா சென்டர் துவங்குவது இடைஞ்சலாக இருக்கும் என புகார் கொடுக்க வந்துள்ளனர் என்றபோது நமக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. தங்களது பள்ளிக்கு வரக்கூடாது. எனக்கூறும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் பள்ளியில் தொழுவது அச்சுறுத்தல், தாஃவா சென்டர் இடைஞ்சல் என்ற இவர்களின் நிலைப்பாடு நமக்கு உண்மையிலேயே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை இதுதான் இவர்களின் லட்சணம்.

சம்பவம் 3 :

இலங்கை பேருவளையில் நடந்த கலவரத்தில் தரிக்கா கூட்டத்தினரால் பேருவளை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இந்த சம்பவம் நடைbப்றற சில நாட்களுக்கு பின் நமது மாநில நிர்வாகிகள் நேரில் சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு நிதி உதவியும் வழங்கனர்.


படுகாயமடைந்த சகோதரர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறு நாம் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்த அவர்களுக்கு பல வகையிலும் நமது நிர்வாகிகள் உதவினர் ! பண உதவி தேவையா என பாக்கர் கேட்ட போது தேவையில்லை “எங்களுக்கு இலங்கை சல்லி 10 லட்சம் ஒரு சகோதரர் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார் அதை பெற்றுக் கொள்ள அந்த ஜமாத்தின் அலுவலகத்திற்கு செல்கிறோம்” என்று கூறிச் சென்றார் பேருவளை பள்ளி நிர்வாகி. சென்றவரை கடலை மிட்டாய்காரர் காக்க வைத்து பனைக்குளத்தார் வந்ததும் அவரிடம் பணத்தை கேட்டதற்கு பாக்கர் உங்களை வரச் சொல்லி விட்டு கைவிட்டு விட்டார். என்று ஒரு பேட்டி மட்டும் கொடுத்தால் போதும் என கேமரா மேனை அழைக்க பேருவளை பள்ளிநிர்வாகி “இன்னொருவரை குற்றம் சாட்டி பெறும் பணம் எனக்கு தேவையில்லை” என்று கூறி கிளம்பி விட்டார். இதை அவர் நம்மிடம் சொன்ன போது அவர் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். இன்னோருவர் தந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதற்கு இடைத்தரகுவேலை பார்க்கும் இவர்கள் பாக்கரை பற்றி தவறாக பேட்டி கொடுக்கச் சொல்லும் கொடுமையை என்ன செய்வது ? இதிலிருந்து தெளிவாக நமக்கு தெரிகிறது இவர்கள் பொய்யர்கள்.

மேற்கண்ட மூன்று சம்பவங்களும் அல்லாஹ் மீது ஆணையாக நடந்த உண்மைச்சம்பவங்கள் சமுதாயத்தை காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளை, இயக்க வெறியை எங்கே காட்டுவது என்று கூட தெரியாத இவர்கள் எப்படி சமுதாயத்தை காப்பார்கள் ? எப்படி மக்களுக்கு நேர்வழியை காட்டுவார்கள்? என்பதை சமுதாயத்தின் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

அல்லாஹ்வின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறோம்.

நன்றி - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆன்லைன்

கேள்விக் கணை!!

கடைய நல்லூர் கசமுசா பற்றி நாம் கூறியதற்கு கோவைத் தம்பி கொதித்து போய் கொந்தளித்துள்ளார். ஹோமோ செக்ஸ் பற்றி கூறினால் கோவைத் தம்பிக்கு கோபம் வருவது கடைய நல்லூர் கல்லூரி முதல்வருக்கே வெளிச்சம் !


உடனே பாக்கர் பஸ் மேட்டர் என மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டனர். களியக் காவிளை விவாதத்தின்போது எதிரணிக்காரர் ஒருவர் சொன்னது இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. ‘ஸஹிரத்துன்’ என்ற வார்த்தை ‘சிறிய’ என்பதை தான் குறிக்கும் என்பது சாதாரண மதரஸா மாணவனுக்கு கூட தெரியும் ! ஆனால் அதை “பெரிய” என்று நிறுவ இரண்டு நாள் போராடியதை பார்த்த அவர் சாகுல் ஹமிது குளத்தில் சிறுமியின் தலையை தடவி விட்டு உடனே கரையேறி விட்டார். நீங்கள் இரண்டு நாட்களாக குளத்திற்குள்ளேயே நிற்கின்றீர்களே? என்று கூறியதை போன்று பாக்கர் பஸ்ஸை விட்டு அன்றே இறங்கி விட்டார் இவர்கள் இன்னும் இறங்குவதாக இல்லை எங்கு சுற்றினாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை போல் மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மாட்டோம் என அடம்பிடிக்கிறார்கள்.


பஸ்ஸை விட்டு இறங்கிய பாக்கரை ஏன் மீண்டும் பொதுச் செயலாளராக ஆக்கினீர்கள்?


பாக்கர் பக்கத்தில் அமர்ந்து சென்றதை தவிற வேறெந்த செயலும் செய்யவில்லை. என்று திருச்சி செயற்குழுவிலும் கடலூர் பொதுக்குழுவிலும், முபாஹலாவிலும் கூறியது ஏன்?


பாலியல் குற்றச்சாட்டு என இன்று கூறும் நீங்கள் பாக்கரை அதன் பின் ஊர் ஊராக பயான் செய்ய அனுப்பியது ஏன் ?

வல்லம் மாநாட்டுக்கு வசூல் செய்ய வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பியது ஏன் ?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்காது !

40 பேரோடு பஸ்ஸில் பயணம் செய்வது தவறுக்கு வழிவகுக்கும் என்றால் உங்கள் குடும்ப நண்பர் என நீங்கள் கூறும் ஆற்காடு டீச்சரை அழைத்து வர ஆட்டோ எடுத்து தலைமை அலுவலக ஊழியரை அனுப்புவதேன் ?


குடும்ப நண்பரை குடும்பத்து பெண்களை அனுப்பி தானே அழைத்து வர வேண்டும் ! குடும்பத்தோடு வீட்டில் தானே தங்க வைக்க வேண்டும் ! ஏன் லாட்ஜில் தங்க வைத்துவிட்டு தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டிவிட்டு கைலியை மடித்து கட்டிக்கொண்டு தனியே சந்திக்க செல்ல வேண்டும் “டிவியில் பேசும் தலைவர்” தொப்பி கண்ணாடி இல்லாமல் தனியே வந்தார் என லாட்ஜ் ஊழியர் ஏன் சொல்ல வேண்டும் ?


கேள்விக் கணை தொடரும்.....